Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளா? அப்ப உங்க பாலியல் வாழ்க்கையில் இந்த பிரச்சனைகள் வரலாமாம்!
புதிதாக திருமணமான தம்பதிகள் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் தவறானது. ஆம், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பாலியல் வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் மற்றும் விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம்.
புதிதாக திருமணமான பல தம்பதிகள் தாம்பத்திய உறவில் மற்றும் உடல்ரீதியான நெருக்கத்தில் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படலாம். பாலியல் வாழ்க்கையை பற்றிய ஓர் பயம் அவர்களுக்குள் இருக்கலாம். இது தம்பதிகளுக்குள் மன கசப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தலாம்.

உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான இணைப்புடன் தம்பதிகள் இணைந்திருக்கும்போது, உடலுறவை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உடலுறவு முக்கிய பங்கை வகிக்கிறது. உங்கள் பாலியல் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முதலில் அடையாளம் கண்டு அவற்றை தீர்க்க வேண்டும்.
புதிதாக திருமணமான தம்பதிகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
அடிக்கடி உடலுறவு கொள்வது
புதிதாக திருமணமானவர்கள், தங்கள் பாலியல் வாழ்க்கையை அப்போதுதான தொடங்குவார்கள். அதனால், பாலியல் ஆசையின் தூண்டுதலால், அடிக்கடி உடலுறவு கொள்ளலாம். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உடலுறவு கொள்ளவோ அல்லது பாலியல்ரீதியாக நெருக்கமாக இருக்கவோ விரும்புவார்கள்.
இருப்பினும், ஒரு கட்டத்திற்குப் பிறகு இருவரில் ஒருவருக்கு உடலுறவில் சலிப்பு ஏற்படலாம். மற்றொருவர் பாலியல் ரீதியாக அதிக தூண்டுதலோடு இருக்கலாம். இது சிறிது காலத்தில் தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், தம்பதிகள் உடல் நெருக்கத்தோடு, உணர்வு ரீதியாகவும் இருவரும் நெருக்கமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான தொடர்பு இல்லாமை
பெரும்பாலான புதிய தம்பதிகள் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளாமல் தவறவிடுகிறார்கள். அவர்களின் பாலியல் தேவைகள் மற்றும் அவர்கள் விரும்புவதைப் பற்றி பேசத் தயங்குகிறார்கள். பாலியல் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை மற்றும் ஆசை இருக்கிறது என்பது பற்றி நீங்கள் வெளிப்படையாக உங்கள் துணையிடம் பேச வேண்டும்.
ஆரோக்கியமான தகவல் தொடர்பு கொள்ளுங்கள். இது ஒருவரை பற்றி இன்னொருவர் புரிந்துகொள்ள வழி வகுக்கும். தாம்பத்திய வாழ்க்கையில், ஒரு துணையின் தேவையை இன்னொரு துணை பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டுக்கதைகளை நம்புவது
பாலியல் உறவு குறித்து பல கதைகள் உலா வருகின்றன. அவற்றை எல்லாம் புதுமண தம்பதிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுவாக முதலிரவில் உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு சிறிதாக இருக்கும். ஒரு பெண் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது, அவளின் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள ஜவ்வு கிழிந்து இரத்தம் வெளியேறலாம்.
ஆனால், அது உடலுறவு கொள்ளும்போது தான், அந்த ஜவ்வு கிழிய வேண்டும் என்பதில்லை. உடற்பயிற்சி செய்யும்போது, விளையாடும்போதோ என எப்போதும் வேண்டுமானலும் கிழிந்து இரத்தம் வெளியேறலாம். முதலிரவில் இரத்தம் வெளியேறினால்தான், அவள் கன்னித்தன்மை உடையவள் என்பது கட்டுக்கதை. அறிவியல் ரீதியான விஷயங்களை ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இல்லையெனில், திருமண உறவில் பிரச்சினைகள் எழலாம். அதேபோல, ஒரு ஆணால் உடலுறவில் பெண்ணை திருப்திப்படுத்த முடியாவிட்டால், அவரின் ஆண்மை தன்மை கேள்விக்குட்படுத்தப்படும். அதற்கு, பயம் அல்லது சில மருத்துவ நிலைகள் கூட காரணமாக இருக்கலாம். ஆதலால், தம்பதிகள் இருவரும் சரியான புரிதலோடு வாழ்க்கையை வாழ வேண்டும்.
நேரமின்மை பிரச்சனை
தேனிலவு காலம் முடிந்தவுடன் தம்பதிகள் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குள் நுழைய வேண்டியிருக்கும். அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், இதற்கிடையில் உறவினர்களின் வருகை மற்றும் இவர்களின் பயணம் என கடமைகள் மற்றும் பொறுப்புகளை தூக்கி சுமக்க நேரிடலாம். இதனால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் நேரத்தை ஒன்றாக செலவிட முடியாது. இதனால், தம்பதிகளுக்குள் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆர்வம் குறைவது
ஒரு ஆணுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறினால் அல்லது பெண் முதல் சில முறை உடலுறவில் ஈடுபடத் தவறினால், தம்பதியினர் தங்கள் பாலியல் வாழ்க்கை சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று கருதுகின்றனர். முதலில் சில நேரங்களில் ஆர்வம் இல்லாமல், அது மிகவும் மந்தமானதாக மாறலாம். திருமணமான புதிதில் சிலருக்கு ஆர்வம் இல்லாமல் இருப்பது பொதுவானது.
சில தம்பதிகள் ஒரு நெருக்கமான சூழ்நிலைக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நேரத்தில், சிறந்த செக்ஸ் என்பது நேரம் மற்றும் முயற்சியின் மூலம் மட்டுமே நிகழ்கிறது என்பதை தம்பதிகள் நினைவில் கொள்ள வேண்டும். செக்ஸ் உங்கள் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அன்பை அதிகரிக்கும்.
கருத்தடை பயன்பாடு
புதிதாக திருமணமான தம்பதிகளில் பெரும்பாலானோர் அனுபவமில்லாதவர்களாக இருக்கலாம். சில தம்பதிகள் குழந்தை குறித்து திட்டமிடாமல் இருக்கலாம். ஆதலால், கருத்தடை பயன்பாட்டில் ஆண்கள் காண்டமை பயன்படுத்துகிறார்கள். சில ஆண்களுக்கு ஆணுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது.
அத்தகைய ஆண்கள் 'அந்த' நேரத்தில் சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் விறைப்புத்தன்மையை இழக்க நேரிடும். இந்த நிலைமைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது மனைவிக்கும் தெரியாது. எனவே, இது உங்கள் நெருக்கமான சூழலை வேறுமாதிரி மாற்றலாம்.



Click it and Unblock the Notifications












