Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கணவன் மனைவி சண்டை போட்டாலும் உறவு வலுவாக தொடரணுமா? இந்த டிப்ஸை கடைபிடிங்க..!
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான்.. அப்படி சண்டைகள் வரும்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள். இது உங்கள் தவறு என்று அவர்கள் இருவருமே வாதிடுகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது.
சண்டை பெரிதாகி, இருவருக்குள்ளும் நிரந்தரப் பிரிவினைக்கு வழிவகுக்கிறது. இப்படி சண்டை சச்சரவு ஏற்படும் போது இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். ஒருவரின் தவறுகளை அவர்கள் உணர மற்றொருவர் செயல்பட வேண்டும். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1. கனவன் மனைவி இருவரும் தவறு செய்வது இயல்பு. யாரும் தவறு செய்வதிலிருந்து தப்புவதில்லை. ஆனால், தவறு செய்துவிட்டு, தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல், தவறை திரும்பத் திரும்பக் செய்யும்போது, அது அவர்களின் தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை சுட்டிக்காட்டாமல் புரிந்து நடந்துக் கொள்வது நல்லது..
2. கனவன் மனைவி இருவரும் தப்பு செய்ததாக உணர்ந்தால் சண்டை சச்சரவுகள் வராது. ஆனால் எல்லா தவறுகளுக்கும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் சிலரைப் போலல்லாமல், வருத்தங்கள் தெரிவித்துக் கொள்ளுதல், மனிப்பு கோருதல் உங்களின் உறவை வலுவாக்கும்..
3. கணவன் மனைவிக்கு தனிப்பட்ட சுதந்திரம் அவசியம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு. தனிப்பட்ட சுதந்திரத்தை எல்லை மீறாமல் அனுபவிக்க வேண்டும். உங்கள் துணைக்கு தனிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அப்படி கொடுக்காவிட்டால் இருவருக்கும் இடையே தகராறும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
4. கனவனும் மனைவியும் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டாம். உங்கள் துணையைப் பற்றிய விஷயங்களை ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால், அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அப்போது இருவருக்குள்ளும் மகிழ்ச்சிக்கு இடம் கிடைக்கும். எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் அது பிழையாகவே பார்க்கப்படும். அதனால் எதையுமே அதிகமாக யோசிக்காமல் அப்படியே விடுவதே சிறப்பு..
5. இருவரும் சேர்ந்து வீட்டு வேலை செய்யும் போது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் வேலையை மட்டும் செய்வேன், வீட்டு வேலைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மனைவி, கணவன் கூறுவதால் தகராறுகளும் அதிகரித்து வருகின்றன. இருவரும் சேர்ந்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யும் போது பந்தம் வலுவடைகிறது. உறவு அடுத்த கட்டத்திற்கு மேம்படும்..
6. கணவன் மனைவிக்கு திருமணம் ஆன பிறகு, மனைவி கணவனின் பெருமையையும், கணவன் மனைவியின் பெருமையையும் குறைக்க வேண்டும். உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட எனக்கு புத்திசாலித்தனம் அதிகம், உன் சம்பளத்தை விட என் மாத சம்பளம் அதிகம், உன் பேச்சை கேட்கவே மாட்டேன், போன்ற விஷயங்கள். நீங்கள் இருவரும் உங்கள் ஈகோவை குறைக்கும் போதுதான் உங்களுக்கிடையில் காதல் வளரும். அதனால் கணவனும் மனைவியும் சண்டைகள வந்தாலும் ஒருவருக்கொருவர் இந்த விஷயங்களை ஃபாலோ செய்தாலே போதுமாம்..



Click it and Unblock the Notifications











