Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கணவன் மனைவி சண்டை போட்டாலும் உறவு வலுவாக தொடரணுமா? இந்த டிப்ஸை கடைபிடிங்க..!
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான்.. அப்படி சண்டைகள் வரும்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள். இது உங்கள் தவறு என்று அவர்கள் இருவருமே வாதிடுகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது.
சண்டை பெரிதாகி, இருவருக்குள்ளும் நிரந்தரப் பிரிவினைக்கு வழிவகுக்கிறது. இப்படி சண்டை சச்சரவு ஏற்படும் போது இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். ஒருவரின் தவறுகளை அவர்கள் உணர மற்றொருவர் செயல்பட வேண்டும். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1. கனவன் மனைவி இருவரும் தவறு செய்வது இயல்பு. யாரும் தவறு செய்வதிலிருந்து தப்புவதில்லை. ஆனால், தவறு செய்துவிட்டு, தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல், தவறை திரும்பத் திரும்பக் செய்யும்போது, அது அவர்களின் தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை சுட்டிக்காட்டாமல் புரிந்து நடந்துக் கொள்வது நல்லது..
2. கனவன் மனைவி இருவரும் தப்பு செய்ததாக உணர்ந்தால் சண்டை சச்சரவுகள் வராது. ஆனால் எல்லா தவறுகளுக்கும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் சிலரைப் போலல்லாமல், வருத்தங்கள் தெரிவித்துக் கொள்ளுதல், மனிப்பு கோருதல் உங்களின் உறவை வலுவாக்கும்..
3. கணவன் மனைவிக்கு தனிப்பட்ட சுதந்திரம் அவசியம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு. தனிப்பட்ட சுதந்திரத்தை எல்லை மீறாமல் அனுபவிக்க வேண்டும். உங்கள் துணைக்கு தனிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அப்படி கொடுக்காவிட்டால் இருவருக்கும் இடையே தகராறும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
4. கனவனும் மனைவியும் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டாம். உங்கள் துணையைப் பற்றிய விஷயங்களை ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால், அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அப்போது இருவருக்குள்ளும் மகிழ்ச்சிக்கு இடம் கிடைக்கும். எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் அது பிழையாகவே பார்க்கப்படும். அதனால் எதையுமே அதிகமாக யோசிக்காமல் அப்படியே விடுவதே சிறப்பு..
5. இருவரும் சேர்ந்து வீட்டு வேலை செய்யும் போது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் வேலையை மட்டும் செய்வேன், வீட்டு வேலைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மனைவி, கணவன் கூறுவதால் தகராறுகளும் அதிகரித்து வருகின்றன. இருவரும் சேர்ந்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யும் போது பந்தம் வலுவடைகிறது. உறவு அடுத்த கட்டத்திற்கு மேம்படும்..
6. கணவன் மனைவிக்கு திருமணம் ஆன பிறகு, மனைவி கணவனின் பெருமையையும், கணவன் மனைவியின் பெருமையையும் குறைக்க வேண்டும். உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட எனக்கு புத்திசாலித்தனம் அதிகம், உன் சம்பளத்தை விட என் மாத சம்பளம் அதிகம், உன் பேச்சை கேட்கவே மாட்டேன், போன்ற விஷயங்கள். நீங்கள் இருவரும் உங்கள் ஈகோவை குறைக்கும் போதுதான் உங்களுக்கிடையில் காதல் வளரும். அதனால் கணவனும் மனைவியும் சண்டைகள வந்தாலும் ஒருவருக்கொருவர் இந்த விஷயங்களை ஃபாலோ செய்தாலே போதுமாம்..



Click it and Unblock the Notifications