Just In
- 32 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கலப்புத் திருமணம் செய்யலாம்னு இருக்கீங்களா? நீங்க ரொம்ப லக்கி!
கலப்புத் திருமணத்தினால் உண்டாகும் நன்மைகள்
இந்தியாவில் பலதரப்பட்ட காலச்சாரங்கள் மற்றும் அவற்றிற்குரிய சில கட்டுப்பாடுகள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் கல்வி மற்றும் விழிப்புணர்வு அதிகமாக உள்ள காரணத்தால், கலப்புத் திருமணங்களுக்கு வரும் எதிர்ப்புகள் சற்று குறைந்துள்ளன. ஆனால் இன்னும் முழுமையாக குறையவில்லை என்பது தான் உண்மை.
கலப்பு திருமணங்களுக்கு பல பெற்றோர்கள் இன்னும் ஒரு சில காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கலப்பு திருமணங்களால் தவறுகள் எதுவும் இல்லை. என்ன தான் கலப்பு திருமணங்கள் இரண்டு குடும்பங்களுக்கு இடையே சண்டையை உருவாக்கினாலும், அதில் பல நிறைகள் உள்ளன.
சமூகத்தின் கண்களை திறந்து வைப்பதாகவும், பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சாதியே இல்லாத ஒற்றுமை இந்தியாவை உருவாக்கவும் இந்த கலப்பு திருமணங்கள் உதவுகின்றன. இந்த கலப்பு திருமணங்களினால் உண்டாகும் நிறைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
புரிதல் அதிகரிக்கிறது!
பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் கலப்பு திருமணங்கள் குறைவு தான். பெரும்பாலான கலப்பு திருமணங்கள் கலப்பு திருமணங்களாக தான் உள்ளன. இந்த கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே புரிதலும், அன்யோன்யம் அதிகமாக உள்ளது. அவர்கள் மற்றவர்களை காட்டிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள்.
வரதட்சணை குறைவு!
கலப்பு திருமணங்களில் பெரும்பாலும் வரதட்சணையாக இது வேண்டும், அது வேண்டும் என்று பெண் வீட்டாரிடம் கேட்பதில்லை. இதனை ஒரு முக்கிய நிறையாக எடுத்துக்கொள்ளலாம்.
சமூகத்தில் மாற்றம்:
கலப்பு திருமணங்களில் மக்களுக்கு பரந்து விரிந்த மனதையும், தொலைநோக்குப் பார்வையையும் தருகிறது. அவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது திருமணம் செய்து கொள்கிறார்கள், அவர்களது வாழ்க்கையை நமது கையில் எடுத்துக்கொள்ள கூடாது என்ற மனப்பான்மையை தருகிறது.
ஆரோக்கியம்!
கலப்பு திருமணங்கள் பொதுவாக இரத்தபந்தத்துடன் நடைபெற வாய்ப்புகள் இல்லை. இதனால் நெருங்கி சொந்தத்தில் திருமணம் செய்வதால் உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாவதில்லை.
கலாச்சாரம், பண்டிகைகள்:
கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வதால் பல பண்டிகைகளையும், விழாக்களையும் கொண்டாடலாம். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். திருமணத்தன்று கூட பல்வேறு சடங்குகள் இருக்கும்.
அறிவான குழந்தைகள்:
ஒரு ஆராய்ச்சியில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள், ஒரே இனத்தில் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளை விட அறிவானவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சிறந்த பெற்றோர்கள்:
கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை அனைத்து விஷயத்திலும் சிறப்பாக வளர்க்கிறார்களாம். அவர்கள் எதையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கிறார்களாம். சமூகத்தில் தன் குழந்தை நன்றாக வர இவர்களது எண்ணங்களும் செயல்களும் பெரும் உதவியாக இருக்கிறது.