Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மனிதனாக இருந்தால் இந்த மூன்றும் இருக்க வேண்டும்.....
உறவுகளை வலுப்படுத்த, இறுக்கம் குறையாமல் பாதுகாக்க மனித நேயம் என்பது மிகவும் அவசியம். மனிதர்களின் அடிப்படியே இந்த மனித நேயம் தான். ஆனால், இது தான் இன்று பெரும் பஞ்சத்தில் அடிப்பட்டு கிடக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
மனித நேயத்தின் கரு அனுதாபம். ஒருவர் மோசமான நிலையில் வாடும் போது பணம் கொடுத்து உதவ முடியவில்லை எனிலும். அனுதாபமான வார்த்தைகள் மூலம் அவர்களுக்கு உறுதுணையாக, மனதை வலுபடுத்த செய்யலாம்.

அறிவாற்றல் / மனித நேய அனுதாபம்
ஒருவர் முடியாமல் அல்லது மிகவும் மோசமான நிலையில் வாடும் போது அவர்களுக்காக அனுதாபப்படுவது. இது, உங்கள் மீதான மற்றவர்களுடைய மதிப்பை அதிகரிக்கும்.

சமூக அனுதாபம்
சமூக அனுதாபம் தான் ஒருவரை உணர்ச்சி ரீதியாக பெரிதாய் தாக்கமடைய செய்யும். சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு ஏற்பட்டது ஓர் உதாரணம். அந்த தருணத்தில் அனுதாபம் ஏற்படுவது சமூகத்தில் உங்களுக்கான இடத்தை பெரிதுப்படுத்தும்.

அக்கறை அனுதாபம்
அக்கறை, மற்ற இரண்டை விட இது மிகவும் அவசியமானது. குறைந்தபட்சம் இந்த அக்கறையாவது இருக்க வேண்டும். உங்கள் குடும்பம், சுற்றும், நட்பின் மீதாவது இந்த அக்கறை குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

மன அழுத்தம்
இந்த அக்கறை தான் மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து. மேலும், ஒருவர் மீது நீங்கள் உண்மையாக அக்கறை செலுத்தினால் அது இரட்டிப்பு மடங்காக உங்களிடம் வந்து சேரும்.

உறவுகள்
மக்கள் இணைப்பு, சமூக இணைப்பு, மனம் சார்ந்த இணைப்பு என உறவுகளை வலுப்படுத்த இவ்வகையான அனுதாபங்கள் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனித நேயம் இருந்தால் தானே நாம் அனைவரும் மனிதர்களாக இருக்க முடியும்.



Click it and Unblock the Notifications











