மனிதனாக இருந்தால் இந்த மூன்றும் இருக்க வேண்டும்.....

உறவுகளை வலுப்படுத்த, இறுக்கம் குறையாமல் பாதுகாக்க மனித நேயம் என்பது மிகவும் அவசியம். மனிதர்களின் அடிப்படியே இந்த மனித நேயம் தான். ஆனால், இது தான் இன்று பெரும் பஞ்சத்தில் அடிப்பட்டு கிடக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

மனித நேயத்தின் கரு அனுதாபம். ஒருவர் மோசமான நிலையில் வாடும் போது பணம் கொடுத்து உதவ முடியவில்லை எனிலும். அனுதாபமான வார்த்தைகள் மூலம் அவர்களுக்கு உறுதுணையாக, மனதை வலுபடுத்த செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவாற்றல் / மனித நேய அனுதாபம்

அறிவாற்றல் / மனித நேய அனுதாபம்

ஒருவர் முடியாமல் அல்லது மிகவும் மோசமான நிலையில் வாடும் போது அவர்களுக்காக அனுதாபப்படுவது. இது, உங்கள் மீதான மற்றவர்களுடைய மதிப்பை அதிகரிக்கும்.

சமூக அனுதாபம்

சமூக அனுதாபம்

சமூக அனுதாபம் தான் ஒருவரை உணர்ச்சி ரீதியாக பெரிதாய் தாக்கமடைய செய்யும். சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு ஏற்பட்டது ஓர் உதாரணம். அந்த தருணத்தில் அனுதாபம் ஏற்படுவது சமூகத்தில் உங்களுக்கான இடத்தை பெரிதுப்படுத்தும்.

அக்கறை அனுதாபம்

அக்கறை அனுதாபம்

அக்கறை, மற்ற இரண்டை விட இது மிகவும் அவசியமானது. குறைந்தபட்சம் இந்த அக்கறையாவது இருக்க வேண்டும். உங்கள் குடும்பம், சுற்றும், நட்பின் மீதாவது இந்த அக்கறை குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்த அக்கறை தான் மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து. மேலும், ஒருவர் மீது நீங்கள் உண்மையாக அக்கறை செலுத்தினால் அது இரட்டிப்பு மடங்காக உங்களிடம் வந்து சேரும்.

உறவுகள்

உறவுகள்

மக்கள் இணைப்பு, சமூக இணைப்பு, மனம் சார்ந்த இணைப்பு என உறவுகளை வலுப்படுத்த இவ்வகையான அனுதாபங்கள் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனித நேயம் இருந்தால் தானே நாம் அனைவரும் மனிதர்களாக இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 23, 2016, 17:10 [IST]
Desktop Bottom Promotion