Just In
- 20 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 45 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மனித நேயம் இன்னும் இறந்திடவில்லை என்று நிரூபித்த தமிழக மக்கள்!!
தொழிநுட்ப வளர்ச்சி கண்ட இந்த நூற்றாண்டில் மனித நேயம் மாண்டுவிட்டது என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. ஆம், சென்ற வாரம் வரை அப்படி தான் நானும், நீங்களும் கூட நினைத்து வந்தோம். ஆனால், கடந்த ஓர் வாரமாக மட்டுமல்ல, ஒவ்வொரு முறை உலகில் எங்கேனும் மனிதருக்கு பெரும் துயர் எனும் போது மனதில் ஏற்படும் ஒரு துளி வருத்தம் இன்னும் வற்றிப்போய்விடவில்லை என்பதே நிதர்சனம்.
குஜராத் பூகம்பம், வட இந்தியாவை தாக்கிய வெள்ளப்பெருக்குகள் போன்றவை ஏற்பட்ட போதெல்லாம் துடித்த அதே உள்ளங்கள் இன்று சென்னை மக்களுக்காகவும் துடித்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக சென்னையின் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கு ஓரிரு வாரங்களில் வற்றிவிடும். ஆனால், மனிதர்களாகிய நமது மனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரம் வற்றிவிடாது என்பதற்கான மற்றுமொரு சான்றாக இன்றைய மக்களின் மனநிலை விளங்குகிறது.....
தன்னிலை பாராத உதவி
தன்னிலை, தன்னலம் பாராது, குடியிருப்புகளில் தவித்துக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் மக்களை தேடி, தேடி காப்பாற்றி வருகிறார்கள் பொது மக்கள். இராணுவத்தின் உதவி கிடக்கும் முன்னர் இருந்தே, தண்ணீர் நிறைப்பும் டிரம், கயிறு போன்றவை கொண்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து வருகிறார்கள்.
உணவு தயாரிப்பு
வெள்ளப்பெருக்கு இல்லாத இடங்களில் இருந்து, நீர் சூழந்த இடங்களில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளித்து வருகிறார்கள் பொதுமக்கள்.
பிரபலங்கள் உதவி
ஷாலினி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி போன்ற பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். மேலும் வாகனங்கள் கொடுத்ததும், பாதிப்பு இல்லாத இடங்களுக்கு மக்களை கூட்டி சென்றும் உதவிகள் செய்து சாதாரண மக்கள் கூட தங்களது சூப்பர் குணத்தால் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கிறார்கள்.
சென்னையுடன் கைகோர்த்த ஏனைய நகரங்கள்
கோவை, பெங்களூர் போன்ற பல பகுதிகளில் இருந்து போது மக்கள், வானொலி நண்பர்கள் போன்றவர்கள் லாரி, கார்கள் மூலம், பல பகுதிகளில் இருக்கும் மக்களிடம் இருந்து, துணி, உணவு, பிஸ்கட், பெண்களுக்கான பாதுகாப்பு பொருட்கள் என முடிந்த வரை கிடைப்பதை எல்லாம் சேகரித்து சென்னை மக்களுக்காக கொண்டு செல்கிறார்கள்.
மனதில் ஈரம் காயாது
கண்டிப்பாக சென்னையின் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கு ஓரிரு வாரங்களில் காய்ந்துவிடும். ஆனால், ஊர், பெயர் தெரியாது, தான் தரும் பொருள் யார் கைக்கு செல்கிறது என்று தெரியாது, தூய மனதுடன் உதவி வரும் மக்களின் மனதில் இருக்கும் அந்த ஈரம் எத்தனை வருடங்கள் ஆயினும் கூட காயாது.
பணம் கொடுத்தும் உதவும் மக்கள்
உணவு, உடை, இடம் மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் யாரேனும் அவசரம் என்றால் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் தாங்கள் பணம் கட்டுகிறோம் என்று உதவும் அளவு மக்கள் தங்களது மனித நேயத்தையும், உறவு பாலத்தையும் வெளிகாட்டி வருகிறார்கள்.
இயற்கைக்கு நன்றி
அவ்வப்போது உந்தன் சீற்றத்தை காட்டி மிரளவைத்தாலும், அந்த சீற்றத்தின் மூலம், மனிதனின் மனிதில் இருக்கும் ஈரத்தை வெளிப்பட வைக்கவும் நீயே காரணமாய் இருக்கிறாய்.