Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Movies அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹனிமூன் தம்பதிகள் சந்தோசமா இருக்காங்களா?
புதிதாக திருமணமான தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும் ஜோடியாக சுற்றுவார்கள். புது இடங்களுக்கு தனிமையில் ஹனிமூன் செல்வார்கள், ஒருவித கிரக்கத்தில் திரிவார்கள். ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவித அச்ச உணர்வுடன் இருக்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
திருமண மயக்கம் என்பது புதுமணத்தம்பதியர் அனைவருக்குமே இருக்கக் கூடியதுதான். இதனாலேயே ஒரு ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை முடிந்து மறுபடியும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது ஆகும். இந்திய தம்பதிகளுக்கு இந்த மயக்கத்தோடு கர்ப்பமும் இணைந்து கொள்ளும்.
அதேசமயம் ஆஸ்திரேலியா நாட்டில் புதுமணத்தம்பதிகள் 73 முதல் 76 சதவிகிதம் பேர் வரை ஒரு வித அச்ச உணர்வுடனே வாழ்வதாக கூறியுள்ளனர். டிய்க்கின் பல்கலைக்கழக ஆஸ்திரேலிய மையத்தின் சார்பில் வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்தது.
தேனிலவு என்பது சம்பிரதாயத்துக்குரிய சடங்கு தானே தவிர உண்மையில் கணவன், மனைவி இருவரும் திருமணமான முதல் வருடத்தில் மனதார மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே அதிக நேரமும் அக்கறையும் எடுத்து கொள்கின்றனராம். அதனாலேயே புது மணத்தம்பதிகள் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணமான இரண்டாவது வருடத்தில் இருந்தில் 78 சதவிகிதம் பேர் சராசரியான நிலைக்கு திரும்பி விடுவதாக கூறியுள்ளனர். திருமணமாகி 5 முதல் 13 வருடங்களுக்குள் அவர்களின் சேமிப்பு, குழந்தை பிறப்பு, பொருளாதாரம் போன்றவைகளை திட்டமிடுவதாகவும் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் கூறியுள்ளார்.