Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல்!!!
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட சிறந்தது நட்பே என்று கூட சொல்லலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் தோற்றால் மட்டுமே உயிர் கொடுப்பார்கள். ஆனால் உண்மையான நட்பைக் கொண்டவர்கள், நண்பனுக்கு எந்த நேரத்திலும் உயிரைக் கொடுப்பார்கள். அந்த அளவு நட்பானது புனிதமானது. மேலும் நட்பு எத்தனை கடல் தாண்டினாலும், எத்தனை மலை தாண்டிப் போனாலும் அதற்கு அழிவு என்பதே இல்லை.
அத்தகைய நட்பின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக, எத்தனையோ தினத்தை கொண்டாடும் நம் மக்கள், நண்பர்களுக்கு என்று ஒரு தினத்தை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன? அந்த நண்பர்களுக்கான தினம் தான் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை. அந்த தினத்தில் மாணவர்களாக இருந்த காலத்தில் எல்லாம், கைகளில் நண்பர்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப் டேக் கட்டி கொண்டாடி மகிழ்வார்கள்.
அப்படி இருந்த நட்பு, படிப்புகள் எல்லாம் முடிந்து, வேலை என்று சென்றதும், தங்கள் நண்பர்களை காண நேரம் கூட கிடைக்காத அளவு போய்விடும். அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களை, ஃபோன், மெயில், இன்டெர்நெட்டில் இருக்கும் ஃபேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதை நினைத்தால் எப்படி இருந்த நட்பு இப்படி ஆகிவிட்டது என்பது போல் ஆகிவிட்டது. இவ்வாறு நண்பர்களை காண இத்தனை தடை இருந்தால், இன்னும் கொஞ்ச காலத்தில் ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...என்று தான் பாடிச் செல்ல வேண்டிய நிலை கூட வந்துவிடும்.
ஆகவே இந்த நண்பர்கள் தினத்தன்று, லீவு தானே என்று நினைத்து, எந்த ஒரு சோம்பேறித்தனமும் படாமல், உங்கள் நண்பர்களை சென்று பார்த்து, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து, அவர்கள் கையில் ஒரு சிறிய ஃப்ரெண்ட்ஷிப் டேக்-ஐ கட்டி, உங்களது பழைய கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தி மகிழ வையுங்கள்.
ஒரு வேளை இதற்கு தான் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடுகிறார்களோ, என்னவோ!!!
என்ன நண்பர்களே!!! ஃப்ரெண்ட்ஷிப் டே கொண்டாட ரெடியா இருக்கீங்களா!!!