Latest Updates
-
வரதட்சணை கொடுமை: திருமணத்திற்கு முன்பே இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார்! உயிரைக் காக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன? -
முடி கொட்டுதா? முகம் டல்லா இருக்கா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுனத்தில் 3 கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 4 ராசிகளின் நிதி நிலை இருமடங்கு அதிகரிக்கப்போகுது. -
கோடை வெயிலால் அவதியா? இந்த வாஸ்து செடிகளை வீட்டில் வையுங்க… குளிர்ச்சியும் பணவரவும் தானாக தேடி வரும்! -
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க.. -
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்! -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம்
காதலியை காக்க வைக்காதீங்க!!!

எப்போதுமே பெண்களை காக்க வைத்து தாமதமாக அவர்களை காணச் செல்லும் போது, அவர்கள் படும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த அவர்களுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் காத்திருந்ததால் மிகவும் வருத்தத்துடன் கோபமாகவே இருப்பர். அப்போது அவர்களுக்கு ஒரு சிறிய சந்தோஷப்படக்கூடியவாறு ஏதேனும் வாங்கி கொடுக்கலாம் அல்லது அனைத்து பெண்களுக்கும் பிடித்த டெடி பியர் வாங்கி கொடுக்கலாம். இல்லை அவர்கள் கோபம் போகவே இல்லையென்றால், அப்போது அவர்கள் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட ஏதேனும் ஒன்றை செய்தோ அல்லது கொடுத்தோ அவர்களை குளிர்விக்கலாம். ஒண்ணும் முடியாட்டி ஒரு முத்தமாச்சும் கொடுங்க.
காதலியை நீண்ட நேரம் காக்க வைத்தால், நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் அழகான, நல்ல குணம் உள்ள ஆண்களையே தேர்ந்தெடுத்து காதலிப்பர். அவ்வாறு ஆசைப்பட்டு காதலிக்கும் காதலன் முதலில் நன்கு நேரத்தை கடைபிடித்தவர், போக போக காக்க வைத்துக்கொண்டே இருந்தால், பின் அவளை வேறு ஒருவன் தூக்கி சென்றுவிடுவான். ஆகவே எப்போதுமே அவ்வாறு தாமதமாக வராமல், காதலியை பார்க்க போகும் சமயம் ஏதேனும் வேலை வந்து தாமதமாகும் என்று தெரிந்தால், உடனே காதலிக்கு போன் செய்து தகவலை தெரிவித்துவிடுங்கள். இதனால் அவர்கள் எந்த கோபமும் படாமல் சந்தோஷமாக இருப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும் அவர்கள் மனதில் தோன்றி, காதல் அதிகரிக்கும்.
சிலசமயம் காதலியை/மனைவியை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டால், அவர்களும் ஒரு நாள் உங்களை காக்க வைப்பார்கள். உதாரணமாக, உங்கள் காதலியை ஒரு 1/2 மணிநேரம் காக்க வைக்க நேர்ந்தால், அவள் மறுநாள் உங்களை காண வரும் போதோ அல்லது எங்கேனும் செல்லும் போதோ, 1 மணிநேரம் காக்க வைப்பாள். இவ்வாறு இருந்தால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.
மேலும் அவர்கள் காத்திருப்பதால், அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துவிடும். மேலும் இது உறவுகளுக்குள் ஒரு கெட்ட எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே நேரத்தை சரியாக கடைபிடித்து உங்கள் மேல் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.
ஆகவே தாமதமாக காதலியையோ அல்லது மனைவியையோ சந்திக்க செல்லும் போது, அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கி கொண்டு செல்லுங்கள், இது எந்த பிரச்சனையையும் வராமல் தடுக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications