Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான மிளகு சீரக அடை ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இதுல உங்க கட்டைவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
வெயில் காலத்தில் வீட்டில் ஏசி சண்டையா? இந்த சின்ன மாற்றங்கள் உங்கள் குடும்ப அமைதியை காக்கும்! -
சூரியன் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு செலவுகளும், தோல்விகளும் தேடிவரப் போகுதாம் -
1 கப் மீல்மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
டேட்டிங் ஆப் மூலம் டேட்டிங் செல்கிறீர்களா? இந்த கஃபேக்களில் நடக்கும் 'ஹனி டிராப்' மோசடியில் சிக்காமல் இருக்க இதை உடனே தெரிஞ்சுக்கோங்க! -
இந்த 4 ராசிக்காரங்க பேசுவதில் ரொம்ப பலவீனமானவர்களாம் - இவங்களுக்கு பிரச்சினையே இவங்க வாய்தான் -
முகம் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப வெறும் 2 பொருட்களை கொண்ட 'இந்த ஃபேஸ் பேக்' போடுங்க..
புதுமணத் தம்பதியருக்கு எதற்கெல்லாம் சண்டைகள் வரும் தெரியுமா?

திருமணம் ஆன முதலில் இருவரும் முதன் முறையாக ஒரே வீட்டில் இருப்பதால், இருவருக்கும் வீட்டில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது. உதாரணமாக, காலையில் லேட்டாக எழுந்திருப்பது, எழுந்ததும் பல் கூட துலக்காமல் பால் குடிப்பது, குளியலறையில் குளித்துவிட்டு அழுக்குத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றாலே பெரும்பாலும் சண்டைகளானது வரும். மேலும் அதனை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், அந்த பழக்கங்கள் மாறாமல் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டைகளானது வரும்.
திருமணம் ஆகி நீண்ட நாட்கள் பெற்றோருடன் இருந்து அவர்களை விட்டு பிரிந்திருப்பதால், அவர்களை காண வேண்டும் என்று மனைவி கணவரிடம் கேட்பாள். அவ்வாறு ஒன்று அல்லது இரண்டு முறை கேட்கலாம். ஆனால் அதையே அடிக்கடி கேட்டால் அதுவே பெரும் சண்டையாகிவிடும்.
மேலும் திருமணத்திற்கு முன் கணவன், அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக நேரம் கழித்து வந்தால் யாரும் எதும் சொல்லமாட்டார்கள். அப்போது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சந்தோஷத்தில் அலுவலகத்தில் இருக்கலாம். ஆனால் அதுவே திருமணம் ஆன பின்னர் அவ்வாறு லேட்டாக வந்தால் அவ்வளவு தான், வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்துவிடும். பிறகு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து ஏற்படும் களைப்பை விட, அவர்களை சமாதானப்படுத்த ஏற்படும் களைப்பே பெரும் களைப்பாகிவிடும்.
திருமணத்திற்கு பின், தம்பதியர்கள் தனியாக வீடு எடுத்து தங்கினால், தங்கள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது அந்த வேலையை சரியாக செய்யவில்லையென்றால், அதற்கும் சண்டைகளானது வரும். அந்த சண்டைகளை விட கூட்டுக்குடும்பத்தில் இருந்தால், அப்போது வரும் சண்டைக்கு அளவே இருக்காது. உதாரணமாக, மனைவி அவள் வீட்டில் நிறைய வேலைகளை செய்யாமல் இருந்து, கூட்டுக் குடும்பத்தில் வந்தவுடன் அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டி வந்தால், அப்போது என்ன வரும்? வேறு என்ன சண்டை தான்.
இருவரும் அவர்களது குணங்களை சரியாக புரிந்து கொள்ளாததால், கணவன் ஏதோ கிண்டலாக சொல்ல, அந்த வார்த்தை அல்லது கணவன் கூறிய விதம் பிடிக்காமல் போக, அந்த நேரத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப் போய் விபரீதம் ஆன கதையாக, அதுவும் ஒரு சண்டையிலேயே போய் முடியும்.
ஆகவே இத்தகைய சண்டைகள் அனைத்தும் ஒரு வகையில் அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே ஏற்படுகிறது. இதன் மூலமும் அவர்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, பிற்காலத்தில் அதனை தவிர்த்து, அவர்களை புரிந்து ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த உதவும் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications