Latest Updates
-
இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் எல்லோரையும் விட அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ஜூன் வரை ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
காரைக்குடி வெண்டைக்காய் புளி பச்சடி ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, சாதத்துக்கு சூப்பரா இருக்கும் -
கடும் வெயிலிலும் வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா ஏசி செலவு மிச்சம்! -
செஃப் அருணா விஜய்யின் போண்டா மோர் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
புதன் சுக்கிரன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாத்திரையின்றி பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்லும் இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்.. -
சனி அமாவாசை: வீட்டின் இந்த ஒரு இடத்தில் மாற்றம் செஞ்சா மகாலட்சுமி தானாக வருவாள்! -
சாணக்கிய நீதி படி ஒரு பெண்ணை சிறந்த மனைவியாக 5 குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்க மனைவியிடம் இருக்கா? -
Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?

வாழ்க்கைத்துணையிடம் கண்டிப்போடு இருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும். சாதாரணமாக கணவன் மனைவி என்றால் அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கேள்வி போல் கேள்வி கேட்டு நச்சரிப்பார்கள். அப்படி இருந்தால் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது. ஆகவே அவர்கள் நண்பர்களாக இருக்க முதலில் அவர்கள் கணவன் மற்றும் மனைவி என்று உருவாக்கப்பட்டதை மனதளவில் மறக்க வேண்டும். அதனை மறந்து வாழ்க்கையை நடத்தினால், குடும்ப வாழ்க்கை நன்றாக, ஒரு நட்புறவோடு இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை நினைத்து தேவையில்லாமல் டென்சன் ஆவார்கள். அதிலும் அவர்கள் சம்பளம் குறைவாக உள்ளதோல் வேலையை மாற்றலாமா என்பதைப் பற்றி, வீட்டு வாடகையைப் பற்றி மற்றும் பணத்தை சேமிப்பது பற்றி வாழ்க்கைத் துணையிடம் ஆலோசனை செய்யும் போது எப்போதும் டென்சனோடு இருப்பார்கள். ஆனால் அதையே நண்பர்களிடம் சொல்லும் போது எப்படி கிண்டலோடு, சந்தோஷமாக பேசி பகிர்ந்து கொள்வோம். ஆகவே இதே போல் தன் வாழ்க்கைத்துணையையும் நினைத்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
எதையும் அதிகமாக எதிர் பார்க்காமல் இருக்க வேண்டும். அதற்காக எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்க சொல்லவில்லை, ஒரு சில விஷயங்களுக்கே. உதாரணமாக, வெளியே செல்ல வேண்டும் என்று கூப்பிடும் போது கொஞ்சம் வேலை இருக்கிறது என்று கூறினால், சரி என்று அதனை பெரியதாக எண்ணக் கூடாது. அவ்வாறு செய்யாமல் வந்தாக வேண்டும் என்று கூறி அவர்களை கோபப்படுத்தினால், தேவையில்லாத சண்டைகள் தான் வரும். ஆகவே அதனை தவிர்க்க வேண்டும். அதுவே ஒரு நண்பர்களுக்கு அடையாளம்.
திருமணத்திற்குப் பிறகு அனைத்து செயல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது படுக்கை அறையானாலும் சரி, சமையலறையானாலும் சரி, எதுவானாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்படி ஹாஸ்டலில் தங்கும் போது நண்பர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோமோ, அதேப்போல் ஒரு ரூம் மேட் போல் நடந்து கொள்ள வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் நடந்து கொண்டால், உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு ஒரு நல்ல உயிர் நண்பர்களாக இருப்பார்கள். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications