கள்ளத் தொடர்பு வைத்தால் மாரடைப்பு வரும்: ஆய்வு

By Maha

Illicit Relationships
இன்றைய காலத்தில் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கு இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வித்தியாசமான ஒரு ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில் மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனைவி மற்றும் காதலிக்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

பொதுவாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரிடுவது உண்டு. அதிலும் மற்றவர்களை விட 3 மடங்கு அதிகமாக கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக மரணங்கள் நிகழ்வதாக ஆய்வில் தெரிந்துள்ளது.

Story first published: Thursday, May 24, 2012, 16:02 [IST]
Desktop Bottom Promotion