Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை குடிச்சுகிட்டு வாங்க.. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, எடை சீக்கிரம் குறையும்
Weight Loss Karunkuruvai Arisi Kanji Recipe In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் அதிக கவனம் செலுத்துவீர்களா? குறிப்பாக உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களின் எடையை அசுர வேகத்தில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் நம் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான கருங்குறுவை அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள்.
கருங்குறுவை அரிசி உடலுக்கு நல்ல வலிமையைத் தரும், உடம்பில் உள்ள நச்சுக்கள்/கழிவுகளை வெளியேற்றி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரிசி மிகவும் நல்லது. கருங்குறுவை அரிசியானது கருப்பு கவுனி போன்ற மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்களைக் கொண்டது.

சொல்லப்போனால் 10 கைப்பிடி முருங்கைகீரையில் எவ்வளவு சத்து இருக்குமோ, அந்த அளவு சத்து 1 கப் அரிசியில் உள்ளது. அவ்வளவு சத்தான அரிசியைக் கொண்டு தயாரிக்கும் கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.
உங்களுக்கு கருங்குறுவை அரிசி கஞ்சி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா.? கீழே கருங்குறுவை அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களும
தேவையான பொருட்கள்:
* கருங்குருவை அரிசி - 1 கப்
* தண்ணீர் - 8 கப்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் கருங்குறுவை அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி, இரவு முழுவதும் அல்லது
7 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அரிசி ஊறியதும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு குக்கரை எடுத்து, அதில் பொடித்த கருங்குறுவை அரிசியை
சேர்த்து, அத்துடன் அரிசி ஊற வைத்த நீரையும் சேர்த்து 8 கப் நீரை
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பொடியாக
நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சி மிகவும் கெட்டியாக
இருந்தால், சுடுநீரை ஊற்றி, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பையும் சேர்த்து
கலந்தால், சுவையான மற்றும் சத்தான கருங்குறுவை அரிசி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











