Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த கஞ்சியை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடிங்க.. தொப்பையும் குறையும், சுகரும் கண்ட்ரோலா இருக்கும்.
Weight Loss Kanji Recipe In Tamil: நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியானால் தினசரி உடற்பயிற்சியுடன், பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான காட்டுயானம் அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்து வாருங்கள்.
இந்த கஞ்சி சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் தேங்குவதையும் தடுக்கும். ஒருமுறை இந்த கஞ்சியை செய்து குடித்தால், பின் அடிக்கடி செய்து குடிப்பீர்கள்.

உங்களுக்கு காட்டுயானம் அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காட்டுயானம் அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காட்டுயானம் அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 4 டம்ளர் + தேவையான அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 8
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தயிர் - 3/4 கப்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காட்டுயானம் அரிசியை நீரில் கழுவி, உலர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அரிசியில் உள்ள ஈரப்பதம் போனதும், அதை மிக்சர் ஜாரில் போட்டு
ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் அரைத்த காட்டுயானம் அரிசியைப் போட்டு, அத்துடன்
தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை நன்கு குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதில் கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, ஒரு கொத்து
கறிவேப்பிலை சேர்த்து, மூடி வைத்து, இரவு முழுவதும் நொதிக்க வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், பச்சை
மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தயிர், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை நொதிக்க வைத்த காட்டுயானம் அரிசி கஞ்சியுடன்
சேர்த்து கலந்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கலந்தால், சுவையான காட்டுயானம் அரிசி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications