Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Village Style Chicken Sinthamani Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? வழக்கமாக சிக்கன் வாங்கினால் வறுவல், 65 என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் சிந்தாமணியை செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
இந்த சிக்கன் சிந்தாமணியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இதை செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். நன்கு காரசாரமாக இருப்பதால், சளி பிடித்திருக்கும் போது சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 150 கிராம்
* கடலை எண்ணெய் - 50 மிலி
* சின்ன வெங்காயம் - 250 கிராம் (நீளவாக்கில் மெல்லியதாக
நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* நாட்டுக்கோழி - 1 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் - 2 கைப்பிடி
* சீரகம் - 2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வரமிளகாயின் காம்புகள் மற்றும் அதில் உள்ள விதைகளை
நீக்கிவிட்டு, நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி,
வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை தட்டி சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் சேர்த்து கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து,
நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு வதக்க விட வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, தேங்காய் துண்டுகளை
சேர்த்து கோழி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி மூடி வைத்து 20-25 நிமிடம்
நன்கு கோழியை வேக வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறக்கும் போது, நீர் வற்றியிருந்தால்,
அதில் சீரகத்தை கைகளால் நசுக்கி சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி, கறிவேப்பிலை தூவி
பிரட்டி இறக்கினால், சுவையான சிக்கன் சிந்தாமணி தயார்.



Click it and Unblock the Notifications











