Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
சுவையான மசாலா தால்
பருப்புக்களில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதனை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்படி பருப்புக்களை சமைக்கும் போது, அதில் ஒருசில மசாலாப் பொருட்களை சேர்த்து செய்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த மசாலா தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த மசாலா தால் சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கப் (1 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
மைசூர் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன் (கையால் நசுக்கியது)
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அனைத்து பருப்புக்களையும் நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு அதில் விசில் போனதும், குக்கரை திறந்து மத்து கொண்டு லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, பெருங்காயத் தூள், வரமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மசித்து வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மசாலா தால் ரெடி!!!



Click it and Unblock the Notifications











