Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குடைமிளகாய் ரோல்
காலை வேளையில் நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தயார் செய்ய நினைத்தால், குடைமிளகாய் ரோல் சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த ரெசிபிக்கு எந்த ஒரு சைடு டிஷ் தேவையில்லாததால், இதனை காலையில் சமைப்பது எளிதாக இருக்கும். குறிப்பாக பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை செய்யலாம்.
சரி, இப்போது அந்த குடைமிளகாய் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி கெட்சப் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த ஒவ்வொரு சப்பாத்தியிலும் குடைமிளகாய் கலவையை சிறிது பரப்பி, ரோல் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் ரோல் ரெடி!!!
குறிப்பு:
ஒருவேளை இரவில் செய்த சப்பாத்தி இருந்தால், அதனை சூடேற்றிக் கொண்டும், இந்த ரெசிபியை செய்யலாம்.



Click it and Unblock the Notifications