Latest Updates
-
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன?
குடைமிளகாய் ரோல்
காலை வேளையில் நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தயார் செய்ய நினைத்தால், குடைமிளகாய் ரோல் சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த ரெசிபிக்கு எந்த ஒரு சைடு டிஷ் தேவையில்லாததால், இதனை காலையில் சமைப்பது எளிதாக இருக்கும். குறிப்பாக பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை செய்யலாம்.
சரி, இப்போது அந்த குடைமிளகாய் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி கெட்சப் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த ஒவ்வொரு சப்பாத்தியிலும் குடைமிளகாய் கலவையை சிறிது பரப்பி, ரோல் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் ரோல் ரெடி!!!
குறிப்பு:
ஒருவேளை இரவில் செய்த சப்பாத்தி இருந்தால், அதனை சூடேற்றிக் கொண்டும், இந்த ரெசிபியை செய்யலாம்.



Click it and Unblock the Notifications











