Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
மசாலா கச்சோரி
பண்டிகை காலங்களில் கச்சோரியானது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும். அதிலும் ஹோலி பண்டிகையில் போது, வட இந்தியாவில் தவறாமல் செய்யும் தின்பண்டங்களில் இதுவிம் ஒன்று. இது நிறைய பேருக்கு மிகவும் விருப்பமானது. பொதுவாக கச்சோரியானது போண்டா போன்று இருக்கும். மேலும் கச்சோரிகளில் நிறைய உள்ளன.
இப்போது அவற்றில் ஒன்றான மசாலா கச்சோரியை எளிதான முறையில் எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, மாலை வேளையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

மைதா - 2 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் மைதா, தயிர், உப்பு மற்றும் ஓமம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, ஒரு ஈரமான துணி கொண்டு சுற்றி 1 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், மாங்காய் பொடி, மல்லி தூள், கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் கரம் மசாலா மற்றும் புதினா சேர்த்து, மசாலா பொன்னிறமாக வரும் போது இறக்கி, ஒரு தட்டில் போட்டு, குளிரை வைக்க வேண்டும்.
அடுத்து அந்த பூரி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வட்டமாக தேய்த்து, அதன் நடுவே, அந்த மசாலாவை வைத்து, மூட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பூரி மாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான மசால கச்சோரி ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications