பாசமுள்ள துணைவிக்கு மெதுவடை செய்து கொடுங்கள்

By Mayura Akilan

Urad Dal Vada
தென் இந்தியாவில் வடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காலை சிற்றுண்டி சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போனாலும், இட்லி, வடை அல்லது பொங்கல், வடை என்றுதான் ஆர்டர் செய்வார்கள். அதிலும் உளுந்து வடைக்கு சுவைஞர்கள் அதிகம். உளுந்து வடையை மெதுவடை என்றும் கூறுவார்கள். இந்த மகளிர் தினத்தில் வீட்டில் மெதுவடை செய்து கொடுத்து அசத்துங்கள். குறைவான நேரத்திற்குள் ஈசியாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

உளுந்து கால் கிலோ
பச்சரிசி அரிசி மாவு : 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சமிளகாய் – 3
கருவேப்பிலை – 3 கொத்து
கொத்துமல்லி தழை - சிறிது
இஞ்சி பொடியாக நறுக்கியது – 2 டீ ஸ்பூன்
மிளகு பொடித்தது – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

வடை செய்முறை

உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு மையாக கெட்டியாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவில் பச்சரிசி மாவு, நறுக்கி வைத்த வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு,இஞ்சி,மிளகு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை காயவைத்து மிதமான சூட்டில் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். பொன்னிறத்தில் மெதுவடை சாப்பிட சுவையாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் இருந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

மெதுவடை சுட்டு எடுத்து தயிரில் ஊறவைத்து தயிர் வடையாகவோ, சாம்பாரில் ஊறவைத்து சாம்பார் வடையாகவோ சாப்பிடலாம். கூடுதல் சுவையோடு அதிக சத்தும் கிடைக்கும்.

Desktop Bottom Promotion