Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
சிந்தி பாஜி ரெசிபி
பொதுவாக விரதம் இருக்கும் போது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதிலும் இப்போது நவராத்திரி விரதம் இருக்கும் சமயம் என்பதால், அந்த நவராத்திரியில் விரதம் இருப்போருக்கு ஒரு அருமையான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது தான் சிந்தி பாஜி ரெசிபி. இந்த ரெசிபி ஒரு சிந்தி ரெசிபி. இது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும்.
சரி, இப்போது அந்த சிந்தி பாஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 3 கட்டு
வெந்தயக் கீரை - 1/2 கட்டு
தில் இலைகள் - 1/4 கட்டு
கடலைப் பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் கீரைகளை நன்கு நீரில் அலசி, நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள கீரைகளை சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறி, கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதனை மத்து கொண்டு கடைந்தால், சுவையான சிந்தி பாஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications