Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சிந்தி பாஜி ரெசிபி
பொதுவாக விரதம் இருக்கும் போது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதிலும் இப்போது நவராத்திரி விரதம் இருக்கும் சமயம் என்பதால், அந்த நவராத்திரியில் விரதம் இருப்போருக்கு ஒரு அருமையான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது தான் சிந்தி பாஜி ரெசிபி. இந்த ரெசிபி ஒரு சிந்தி ரெசிபி. இது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும்.
சரி, இப்போது அந்த சிந்தி பாஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 3 கட்டு
வெந்தயக் கீரை - 1/2 கட்டு
தில் இலைகள் - 1/4 கட்டு
கடலைப் பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் கீரைகளை நன்கு நீரில் அலசி, நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள கீரைகளை சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறி, கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதனை மத்து கொண்டு கடைந்தால், சுவையான சிந்தி பாஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











