Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சிந்தி பாஜி ரெசிபி
பொதுவாக விரதம் இருக்கும் போது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதிலும் இப்போது நவராத்திரி விரதம் இருக்கும் சமயம் என்பதால், அந்த நவராத்திரியில் விரதம் இருப்போருக்கு ஒரு அருமையான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது தான் சிந்தி பாஜி ரெசிபி. இந்த ரெசிபி ஒரு சிந்தி ரெசிபி. இது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும்.
சரி, இப்போது அந்த சிந்தி பாஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 3 கட்டு
வெந்தயக் கீரை - 1/2 கட்டு
தில் இலைகள் - 1/4 கட்டு
கடலைப் பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் கீரைகளை நன்கு நீரில் அலசி, நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள கீரைகளை சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறி, கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதனை மத்து கொண்டு கடைந்தால், சுவையான சிந்தி பாஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications