Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
சிம்பிளான... டிபன் சாம்பார்
வீட்டில் இட்லி, தோசை என்று செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சிம்பிளான, அதே சமயம் ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.
இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், மிகவும் ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த டிபன் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
புளிச்சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
தாளிப்பதற்கு...
எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பாசிப்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் விட்டு இறக்கி, மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கு, கேரட், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதனை குக்கரில் உள்ள மசித்து வைத்துள்ள பாசிப்பருப்புடன் சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு, விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அதனை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, புளிச்சாறு ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாம்பார் ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்தால், டிபன் சாம்பார் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











