Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சிம்பிளான... தேங்காய் சாதம்
அலுவலகம் செல்லும் போது காலையில் வெரைட்டி ரைஸ் செய்வது தான் மிகவும் சிறந்தது. இதனால் காலை உணவுடன், மதிய உணவு செய்வதும் முடிந்தது. அத்தகைய வெரைட்டி ரைஸில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு அவற்றில் ஒன்றான தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபியானது பேச்சுலர்களுக்கு ஏற்றது. மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. சரி, இப்போது தேங்காய் சாதத்தை எப்படி சிம்பிளாக செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
சாதம் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
முந்திரி - 5
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications