Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
அருமையான...பஞ்சாபி சன்னா!!!

தேவையான பொருட்கள் :
வெள்ளைக் கொண்டைக்கடலை - 250 கி
வெங்காயம் - 4
தக்காளி - 4
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் கொண்டைக்கடலையை இரவிலேயே நீரில் ஊற வைத்து விட வேண்டும்.
2. பின் மறுநாள் காலையில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இந்த கொண்டைக்கடலையை கழுவி, சிறிது உப்பு போட்டு, 4-5 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
3. வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு, அதன் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு அதில் அரைத்த அந்த வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கவும். பின் அதில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. நெய்யும், கலவையும் பிரியும் வரை வதக்க வேண்டும். பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றவும்.
6. பின் அதில் வேக வைத்த அந்த கொண்டைக்கடலையை போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
7. மசாலாவானது கெட்டியானதும் அதில் காய்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
8. இதோ சுவையான பஞ்சாபி சன்னா தயார்!!!
இதன் மேல் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டும், எலுமிச்சை சாற்றை பிளிந்தும் பரிமாறலாம். இதனால் உண்ணும் போது நன்கு மணமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இது சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











