Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
அருமையான...பஞ்சாபி சன்னா!!!

தேவையான பொருட்கள் :
வெள்ளைக் கொண்டைக்கடலை - 250 கி
வெங்காயம் - 4
தக்காளி - 4
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் கொண்டைக்கடலையை இரவிலேயே நீரில் ஊற வைத்து விட வேண்டும்.
2. பின் மறுநாள் காலையில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இந்த கொண்டைக்கடலையை கழுவி, சிறிது உப்பு போட்டு, 4-5 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
3. வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு, அதன் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு அதில் அரைத்த அந்த வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கவும். பின் அதில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. நெய்யும், கலவையும் பிரியும் வரை வதக்க வேண்டும். பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றவும்.
6. பின் அதில் வேக வைத்த அந்த கொண்டைக்கடலையை போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
7. மசாலாவானது கெட்டியானதும் அதில் காய்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
8. இதோ சுவையான பஞ்சாபி சன்னா தயார்!!!
இதன் மேல் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டும், எலுமிச்சை சாற்றை பிளிந்தும் பரிமாறலாம். இதனால் உண்ணும் போது நன்கு மணமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இது சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications