Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
பருப்பு உருண்டைக்குழம்பு

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 200 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
சீரகம், சோம்புத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் – கால்மூடி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தாளிக்க தேவையானது
உருண்டைக் குழம்பு செய்முறை
கடலைப் பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். பருப்பிலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு அரைக்க வேண்டும். பாதிஅளவு வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து மிகப்பொடியாக நறுக்கவும். இவற்றை அரைத்த பருப்புடன் சேர்த்து உருண்டை பிடித்து இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுந்தப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு கிரேவியாக வரும் வரை வதக்கவும், அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, அதனுடன் சோம்பு, சீரகத்தூள் சேர்த்து கிளறவும். பின்னர் புளியை கரைத்து ஊற்றவும்.
இதனுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தேங்காயை மைய அரைத்து ஊற்றவும். நன்கு கொதி வந்த உடன் ஒவ்வொரு உருண்டையாக போட்டு வே விடவும். பருப்பு உருண்டைக்குழம்பு தயார். சூடாக சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
குறிப்பு:
பருப்பை வேக வைப்பதற்கு பதில் உருண்டையை எண்ணெயில் பொரித்தும் குழம்பில் போடலாம். சுவை சற்று கூடுதலாக கிடைக்கும். ஒருசிலர் வேகவைக்காமல் பச்சையாக உருண்டை பிடித்து போடுவதும் வழக்கம்.



Click it and Unblock the Notifications