Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
காளான் தக்காளி ரொட்டி
இதுவரை காளான் தக்காளி ரொட்டியை செய்து சாப்பிட்டதுண்டா? அப்படியெனில் இங்கு அந்த ரொட்டி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சுவையான மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
அதிலும் இது காலையில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். சரி, இப்போது அந்த காளான் தக்காளி ரொட்டி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
காளான் - 200 கிராம்
தக்காளி - 2 (அரைத்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்த தக்காளியை விட்டு, சிறிது கொதிக்க விட்டு, பின் காளானை சேர்த்து காளான் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் உப்பு சேர்த்து, கரம் மசாலாவை தூவி கிளறி இறக்கி விட வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொன்றாக தேய்த்து, அதன் நடுவே காளான் கலவையை வைத்து மடக்கி, மீண்டும் லேசாக தேய்த்து, அதனை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான காளான் தக்காளி ரொட்டி ரெடி!!!



Click it and Unblock the Notifications