Latest Updates
-
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது?
காளான் பட்டாணி சப்பாத்தி
பலருக்கு சப்பாத்தி விருப்பமான உணவாக இருக்கும். அந்த சப்பாத்தியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒரு வகை தான் காளான் மற்றும் பட்டாணி கொண்டு செய்யப்படும் வித்தியாசமான சுவையுடைய சப்பாத்தி. இந்த சப்பாத்தி செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, இதனை காலை அல்லது இரவு நேரங்களில் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
சரி, இப்போது அந்த காளான் பட்டாணி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
காளான் - 1/2 கப் (நறுக்கியது)
பன்னீர் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
எப்போது மாவானது சற்று கெட்டியாகிறதோ, அப்போது காளான், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு தயிர், பச்சை பட்டாணி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து, கலவை அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு பிசைய வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடாவதற்குள் பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் பட்டாணி சப்பாத்தி ரெடி!!! இதனை கெட்சப் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications