Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
காளான் சீஸ் பக்கோடா
மாலையில் நன்கு சுவையான மற்றும் மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதிலும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் போன்று இருக்க வேண்டுமா? அதுமட்டுமின்றி, எளிமையான செய்முறை கொண்டதாக இருக்க வேண்டுமா? அப்படியெனில், அதற்கு காளான் சீஸ் பக்கோடா சரியானதாக இருக்கும்.
ஆம், இதன் செய்முறை வித்தியாசமானதாக இருந்தாலும், எளிமையானது. இப்போது அந்த காளான் சீஸ் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சீஸ் - 1/3 கப் (துருவியது)
காளான் - 15 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 (தட்டியது)
கடலை மாவு - 1/3 கப்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 1 கப்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், பூண்டு, உப்பு, மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு பௌலில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு காளானை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள தண்டை நீக்கிவிட்டு, அதில் சீஸ் கலவையை வைத்து நிரப்பி, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் சீஸ் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications