Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
காளான் சீஸ் பக்கோடா
மாலையில் நன்கு சுவையான மற்றும் மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதிலும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் போன்று இருக்க வேண்டுமா? அதுமட்டுமின்றி, எளிமையான செய்முறை கொண்டதாக இருக்க வேண்டுமா? அப்படியெனில், அதற்கு காளான் சீஸ் பக்கோடா சரியானதாக இருக்கும்.
ஆம், இதன் செய்முறை வித்தியாசமானதாக இருந்தாலும், எளிமையானது. இப்போது அந்த காளான் சீஸ் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சீஸ் - 1/3 கப் (துருவியது)
காளான் - 15 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 (தட்டியது)
கடலை மாவு - 1/3 கப்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 1 கப்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், பூண்டு, உப்பு, மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு பௌலில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு காளானை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள தண்டை நீக்கிவிட்டு, அதில் சீஸ் கலவையை வைத்து நிரப்பி, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் சீஸ் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications











