Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அருமையான...தட்டைபயறு குழம்பு

தேவையான பொருட்கள் :
தட்டைபயறு 1/4 கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
தேங்காய் 1/4 மூடி
சீரகம் 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
புளி சிறிது
நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் தட்டைபயறை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயை துருவிக் கொள்ளவும். பின் வெங்காயத்தில் பாதியை ஒரு மிக்ஸியில் போட்டு, அதோடு சீரகம் மற்றும் துருவிய தேங்காயை போட்டு நன்கு நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கியதும் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, ஒரு முறை கிளறி கொள்ளவும். பின் அதில் வேகத்துள்ள தட்டைபயறை போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, ஒரு முறை கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான தட்டைபயறு குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications