Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
அருமையான...தட்டைபயறு குழம்பு

தேவையான பொருட்கள் :
தட்டைபயறு 1/4 கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
தேங்காய் 1/4 மூடி
சீரகம் 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
புளி சிறிது
நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் தட்டைபயறை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயை துருவிக் கொள்ளவும். பின் வெங்காயத்தில் பாதியை ஒரு மிக்ஸியில் போட்டு, அதோடு சீரகம் மற்றும் துருவிய தேங்காயை போட்டு நன்கு நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கியதும் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, ஒரு முறை கிளறி கொள்ளவும். பின் அதில் வேகத்துள்ள தட்டைபயறை போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, ஒரு முறை கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான தட்டைபயறு குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications











