Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
அருமையான...தட்டைபயறு குழம்பு

தேவையான பொருட்கள் :
தட்டைபயறு 1/4 கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
தேங்காய் 1/4 மூடி
சீரகம் 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
புளி சிறிது
நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் தட்டைபயறை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயை துருவிக் கொள்ளவும். பின் வெங்காயத்தில் பாதியை ஒரு மிக்ஸியில் போட்டு, அதோடு சீரகம் மற்றும் துருவிய தேங்காயை போட்டு நன்கு நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கியதும் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, ஒரு முறை கிளறி கொள்ளவும். பின் அதில் வேகத்துள்ள தட்டைபயறை போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, ஒரு முறை கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான தட்டைபயறு குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications











