நவராத்திரி...பாசிப்பருப்பு சுண்டல்

By Maha

Moong Dal Sundal
நவராத்திரி என்றாலே அனைத்து வீடுகளிலும் மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு ரெசிபியை கடவுளுக்கு செய்து படைப்பார்கள். அவ்வாறு செய்யும் ரெசிபி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருந்தால் நல்லது. அதற்கு பாசிப்பருப்பை சுண்டல் செய்யலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

* பின் அதில் 1 1/2 கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும். அதற்காக பருப்பு குலைந்துவிடக் கூடாது.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி, அதோடு வேக வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு ஒரு முறை கிளறி, இறக்கி விடவும்.

* பின் அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவினால், பாசிப்பருப்பு சுண்டல் ரெடி!!!

Desktop Bottom Promotion