Latest Updates
-
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
மசாலா பிரட் உப்புமா
தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் பிரட் கொண்டு செய்யப்படும் சாண்ட்விச் தான் காலை உணவாகவும், ஸ்நாக்ஸாகவும் உள்ளது. அப்படி எப்போது பார்த்தாலும் சாண்ட்விச் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, பிரட் கொண்டு உப்புமா செய்தால், நன்றாக இருக்கும். மேலும் இது ஒரு சிறப்பான காலை உணவாகவும், ஸ்நாஸாகவும் இருக்கும்.
குறிப்பாக மசாலா பிரட் உப்புமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது மசாலா பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் - 3-4 துண்டுகள் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 'தாளிப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையானதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், மசாலா பிரட் உப்புமா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications