Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சுரைக்காய் பக்கோடா
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்று இருக்கும் வண்ணம் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை மட்டும் பக்கோடா செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக, சுரைக்காய் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடலாம்.
இந்த சுரைக்காய் பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. இப்போது அந்த சுரைக்காய் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1 (தோலுரித்து, துருவியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 3-4 பல்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதிலிருக்கும் நீரை பிழிந்து விட்டு, அதனை மற்றொரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சாட் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த பக்கோடா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான சுரைக்காய் பக்கோடா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications