Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுரைக்காய் பக்கோடா
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்று இருக்கும் வண்ணம் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை மட்டும் பக்கோடா செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக, சுரைக்காய் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடலாம்.
இந்த சுரைக்காய் பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. இப்போது அந்த சுரைக்காய் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1 (தோலுரித்து, துருவியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 3-4 பல்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதிலிருக்கும் நீரை பிழிந்து விட்டு, அதனை மற்றொரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சாட் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த பக்கோடா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான சுரைக்காய் பக்கோடா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications