Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது!
பச்சை பட்டாணி சப்பாத்தி
காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை பட்டாணி சப்பாத்தி சரியானதாக இருக்கும். பொதுவாக சப்பாத்தி செய்வது மிகவும் எளிமையானது. அதேப் போல் பச்சை பட்டாணி சப்பாத்தி செய்வதும் ஈஸியான ஒன்று.
குறிப்பாக இந்த பச்சை பட்டாணி சப்பாத்தியை குழந்தைகளுக்கு காலையில் செய்து கொடுத்தால், அது மதிய வேளையில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு உணவாக இருக்கும். மேலும் பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, கே மற்றும் கலோரி குறைவாக இருப்பதால், இதனைக் கொண்டு சப்பாத்தி செய்வது மிகவும் ஆரோக்கியமானது. சரி, இப்போது அந்த பச்சை பட்டாணி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 டீஸ்பூன் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பிறகு மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications
