Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
ஈஸியான குடைமிளகாய் புலாவ்
காலையில் மிகவும் சிம்பிளாக ஏதேனும் வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், குடைமிளகாய் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சிம்பிளான மற்றும் காலையில் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த குடைமிளகாய் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1/2 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1/4 இன்ச்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
பூண்டு - 3 பற்கள்
மிளகு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து, அரிசியானது வெந்ததும், அதனை இறக்கி நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து தாளித்து, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி, சாதத்தை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், குடைமிளகாய் புலாவ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications