Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
எளிமையான குடைமிளகாய் புர்ஜி
குடைமிளகாயில் எண்ணற்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் அதிகம் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இதனை முட்டை புர்ஜி போன்று, குடைமிளகாய் புர்ஜி கூட செய்யலாம். இது மிகவும் எளிமையான ரெசிபி. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறான சுவையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட செய்யலாம்.
சரி, இப்போது அந்த சூப்பரான குடைமிளகாய் புர்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 2
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய குடைமிளகாய், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் கடலை மாவைப் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அந்த கடலை மாவை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் புர்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications