Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் சிறப்பு உணவு விவிக்காய். அதை செய்யும் முறை குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
சர்க்கரை - 350 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
தேங்காய் உடைத்த தண்ணீர் - 2 டம்பளர்
மஞ்சள் வாழைப்பழம் (கதலி) - 5 சிறியது
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 100 கிராம்
பூ, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா - தேவையான அளவு
செய்முறை:
நன்கு ஊரிய பச்சரிசியை மினவிசிறிக் காற்றில் உலர்த்தி (வீட்டினுள்), மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை சலித்து எடுத்துக் குருணையில், 200 கிராம் எடுத்து போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து குருணையைப் போட்டு கட்டி விழாமல் கிளறி, கஞ்சி போல ஆனதும், இறக்கி ஆற வைக்கவும்.
வாழைப்பழங்களை மிக்சியில் கூழாக்கி பின்பு ஆறிய கஞ்சி மாவில், அரிசி மாவு, தேங்காய்த் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து உப்பு சேர்த்து, பிசைந்து, இரவில் புளிக்க வைக்கவும். தேங்காய்த் தண்ணீருக்குப் பதில், ஈஸ்ட் அல்லது மோர் ஊற்றியும் புளிக்க வைக்கலாம். மாவை சிறிது கெட்டியாக பிசைந்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் புளித்துப் பொங்கியிருக்கும் மாவுடன் தேங்காய்ப் பூ, சர்க்கரை, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு நன்கு தளர்ந்திருக்கும். பின் இட்லித் தட்டில், எண்ணெய் தடவி இட்லி போல ஊற்றி வேக விடவும். நடுவில் வெடித்து வந்தால், வெந்த பக்குவம் சரி.
புளிப்பும், இனிப்புமாக செய்யப்படும் இந்த விவிக்காய், ஈஸ்டர் விழாக்கால சிறப்பு சிற்றுண்டியாகும். காலை சிற்றுண்டியாக, குறிப்பாக நெல்லை மாவட்ட மக்கள், ஈஸ்டர் அன்று செய்து உண்பார்கள்.
இதனை சிக்கன் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
- ரோஸ்லின் தாமஸ்



Click it and Unblock the Notifications