Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் சிறப்பு உணவு விவிக்காய். அதை செய்யும் முறை குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
சர்க்கரை - 350 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
தேங்காய் உடைத்த தண்ணீர் - 2 டம்பளர்
மஞ்சள் வாழைப்பழம் (கதலி) - 5 சிறியது
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 100 கிராம்
பூ, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா - தேவையான அளவு
செய்முறை:
நன்கு ஊரிய பச்சரிசியை மினவிசிறிக் காற்றில் உலர்த்தி (வீட்டினுள்), மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை சலித்து எடுத்துக் குருணையில், 200 கிராம் எடுத்து போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து குருணையைப் போட்டு கட்டி விழாமல் கிளறி, கஞ்சி போல ஆனதும், இறக்கி ஆற வைக்கவும்.
வாழைப்பழங்களை மிக்சியில் கூழாக்கி பின்பு ஆறிய கஞ்சி மாவில், அரிசி மாவு, தேங்காய்த் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து உப்பு சேர்த்து, பிசைந்து, இரவில் புளிக்க வைக்கவும். தேங்காய்த் தண்ணீருக்குப் பதில், ஈஸ்ட் அல்லது மோர் ஊற்றியும் புளிக்க வைக்கலாம். மாவை சிறிது கெட்டியாக பிசைந்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் புளித்துப் பொங்கியிருக்கும் மாவுடன் தேங்காய்ப் பூ, சர்க்கரை, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு நன்கு தளர்ந்திருக்கும். பின் இட்லித் தட்டில், எண்ணெய் தடவி இட்லி போல ஊற்றி வேக விடவும். நடுவில் வெடித்து வந்தால், வெந்த பக்குவம் சரி.
புளிப்பும், இனிப்புமாக செய்யப்படும் இந்த விவிக்காய், ஈஸ்டர் விழாக்கால சிறப்பு சிற்றுண்டியாகும். காலை சிற்றுண்டியாக, குறிப்பாக நெல்லை மாவட்ட மக்கள், ஈஸ்டர் அன்று செய்து உண்பார்கள்.
இதனை சிக்கன் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
- ரோஸ்லின் தாமஸ்



Click it and Unblock the Notifications











