Latest Updates
-
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்..
ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் சிறப்பு உணவு விவிக்காய். அதை செய்யும் முறை குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
சர்க்கரை - 350 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
தேங்காய் உடைத்த தண்ணீர் - 2 டம்பளர்
மஞ்சள் வாழைப்பழம் (கதலி) - 5 சிறியது
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 100 கிராம்
பூ, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா - தேவையான அளவு
செய்முறை:
நன்கு ஊரிய பச்சரிசியை மினவிசிறிக் காற்றில் உலர்த்தி (வீட்டினுள்), மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை சலித்து எடுத்துக் குருணையில், 200 கிராம் எடுத்து போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து குருணையைப் போட்டு கட்டி விழாமல் கிளறி, கஞ்சி போல ஆனதும், இறக்கி ஆற வைக்கவும்.
வாழைப்பழங்களை மிக்சியில் கூழாக்கி பின்பு ஆறிய கஞ்சி மாவில், அரிசி மாவு, தேங்காய்த் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து உப்பு சேர்த்து, பிசைந்து, இரவில் புளிக்க வைக்கவும். தேங்காய்த் தண்ணீருக்குப் பதில், ஈஸ்ட் அல்லது மோர் ஊற்றியும் புளிக்க வைக்கலாம். மாவை சிறிது கெட்டியாக பிசைந்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் புளித்துப் பொங்கியிருக்கும் மாவுடன் தேங்காய்ப் பூ, சர்க்கரை, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு நன்கு தளர்ந்திருக்கும். பின் இட்லித் தட்டில், எண்ணெய் தடவி இட்லி போல ஊற்றி வேக விடவும். நடுவில் வெடித்து வந்தால், வெந்த பக்குவம் சரி.
புளிப்பும், இனிப்புமாக செய்யப்படும் இந்த விவிக்காய், ஈஸ்டர் விழாக்கால சிறப்பு சிற்றுண்டியாகும். காலை சிற்றுண்டியாக, குறிப்பாக நெல்லை மாவட்ட மக்கள், ஈஸ்டர் அன்று செய்து உண்பார்கள்.
இதனை சிக்கன் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
- ரோஸ்லின் தாமஸ்



Click it and Unblock the Notifications