Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் சிறப்பு உணவு விவிக்காய். அதை செய்யும் முறை குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
சர்க்கரை - 350 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
தேங்காய் உடைத்த தண்ணீர் - 2 டம்பளர்
மஞ்சள் வாழைப்பழம் (கதலி) - 5 சிறியது
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 100 கிராம்
பூ, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா - தேவையான அளவு
செய்முறை:
நன்கு ஊரிய பச்சரிசியை மினவிசிறிக் காற்றில் உலர்த்தி (வீட்டினுள்), மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை சலித்து எடுத்துக் குருணையில், 200 கிராம் எடுத்து போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து குருணையைப் போட்டு கட்டி விழாமல் கிளறி, கஞ்சி போல ஆனதும், இறக்கி ஆற வைக்கவும்.
வாழைப்பழங்களை மிக்சியில் கூழாக்கி பின்பு ஆறிய கஞ்சி மாவில், அரிசி மாவு, தேங்காய்த் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து உப்பு சேர்த்து, பிசைந்து, இரவில் புளிக்க வைக்கவும். தேங்காய்த் தண்ணீருக்குப் பதில், ஈஸ்ட் அல்லது மோர் ஊற்றியும் புளிக்க வைக்கலாம். மாவை சிறிது கெட்டியாக பிசைந்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் புளித்துப் பொங்கியிருக்கும் மாவுடன் தேங்காய்ப் பூ, சர்க்கரை, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு நன்கு தளர்ந்திருக்கும். பின் இட்லித் தட்டில், எண்ணெய் தடவி இட்லி போல ஊற்றி வேக விடவும். நடுவில் வெடித்து வந்தால், வெந்த பக்குவம் சரி.
புளிப்பும், இனிப்புமாக செய்யப்படும் இந்த விவிக்காய், ஈஸ்டர் விழாக்கால சிறப்பு சிற்றுண்டியாகும். காலை சிற்றுண்டியாக, குறிப்பாக நெல்லை மாவட்ட மக்கள், ஈஸ்டர் அன்று செய்து உண்பார்கள்.
இதனை சிக்கன் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
- ரோஸ்லின் தாமஸ்



Click it and Unblock the Notifications