Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
பிரட் தோசை
தோசைகளில் எத்தனையோ தோசைகளைப் பார்த்திருப்போம். ஆனால் பிரட் தோசையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், காலை வேளையில் தாமதமாக எழுந்துவிட்டால், அப்போது சீக்கிரம் காலை உணவை செய்ய வேண்டுமெனில், அதற்கு இந்த பிரட் தோசை சரியானதாக இருக்கும்.
அந்த பிரட் தோசையின் செய்முறையைக் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
பிரட் - 12
ரவை - 6 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் 2 நிமிடம் ஊற வைத்து, நீரை பிழிந்துவிட வேண்டும்.
பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, ரவை, உப்பு, அரிசி மாவு மற்றும் தயிர் ஊற்றி நன்கு அடித்து, அந்த மாவை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதனை பௌலில் உள்ள மாவில் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதனை ஈரத் துணியால் துடைத்து விட்டு, மாவை தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பிரட் தோசை ரெடி!!!



Click it and Unblock the Notifications