Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
பிரட் தோசை
தோசைகளில் எத்தனையோ தோசைகளைப் பார்த்திருப்போம். ஆனால் பிரட் தோசையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், காலை வேளையில் தாமதமாக எழுந்துவிட்டால், அப்போது சீக்கிரம் காலை உணவை செய்ய வேண்டுமெனில், அதற்கு இந்த பிரட் தோசை சரியானதாக இருக்கும்.
அந்த பிரட் தோசையின் செய்முறையைக் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
பிரட் - 12
ரவை - 6 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் 2 நிமிடம் ஊற வைத்து, நீரை பிழிந்துவிட வேண்டும்.
பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, ரவை, உப்பு, அரிசி மாவு மற்றும் தயிர் ஊற்றி நன்கு அடித்து, அந்த மாவை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதனை பௌலில் உள்ள மாவில் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதனை ஈரத் துணியால் துடைத்து விட்டு, மாவை தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பிரட் தோசை ரெடி!!!



Click it and Unblock the Notifications











