Latest Updates
-
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம்
தயிர் வடை
மாலை வேளை என்றாலே அனைவருக்கும் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அவற்றில் ஒன்றான வடையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு, உடலை குளிர்ச்சியாக்கும் வகையிலும், வயிற்றை நிரம்பும் விதமாக ஸ்நாக்ஸ் சாப்பிட ஏற்றது என்றால் அது தயிர் வடை தான்.
இது செய்வது என்பது மிகவும் எளிமையானது. சரி, இப்போது அந்த தயிர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயிருக்கு...
தயிர் - 1 கிலோ
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை 5-6 மணிநேரம் ஊற வைத்து, பின் கிரைண்டரில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, நன்கு அடித்து, மிளகாய் தூள், சீரகப் பொடி, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் வடையை தட்டிலோ அல்லது சிறு கிண்ணத்திலோ வைத்து, அதில் தயிர் கலவையை ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லியை தூவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து பரிமாறினால், தயிர் வடை ரெடி!!!



Click it and Unblock the Notifications