Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கறிவேப்பிலை இட்லி பொடி
பொதுவாக காலை வேளையில் அவசர அவசரமாக தோசை, இட்லி செய்துவிடுவோம். ஆனால் அதற்கு சட்னி, சாம்பார் என எது செய்வதென்று பலர் தினமும் யோசனையில் மூழ்குவார்கள். அத்தகயைவர்களுக்காக எளிமையான ஒரு ரெசிபியைக் கீழே கொடுத்துள்ளோம்.
அது வேறொன்றும் இல்லை, இட்லி பொடி தான், இட்லிப் பொடியில் பல உள்ளன. இப்போது அதில் கறிவேப்பிலை இட்லி பொடியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதனைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வர மிளகாய் - 7
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு, 2-3 நிமிடம் மொறுமொறுவென வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து, குளிர வைக்க வேண்டும்.
பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வறுத்தப் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, நன்கு குளிர வைக்கவும்.
அனைத்துப் பொருட்களும் நன்கு குளிர்ந்ததும், மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரளவு அரைத்து, பின் அதில் வறுத்து வைத்துள்ள பருப்புக்கள் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொண்டால், சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி!!! இதனை இட்லி, தோசை மற்றும் சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











