Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தேங்காய் பொடி சாதம்
காலையில் நல்ல சுவையான, அதே சமயம் வித்தியாசமான வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், தேங்காய் பொடி சாதம் செய்து சாப்பிடுங்கள். இது சமைப்பது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு அந்த தேங்காய் பொடி சாதத்தின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு அத்துடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, 15 நிமிடம் மூடி வைத்து பின் பரிமாறினால், சுவையான தேங்காய் பொடி சாதம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications