Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
தேங்காய் பால் புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது)
குங்குமப் பூ - 1 பெரிய சிட்டிகை
தேங்காய் பால் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சற்று அதிக அளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்க வேண்டும்.
பிறகு அந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் மட்டும் இருக்குமாறு வைத்து, மீதமுள்ள எண்ணெயை எடுத்துவிடவும்.
பின்னர் அந்த எண்ணெயில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து, லேசாக வறுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு டீஸ்பூன் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த பாலை குங்குமப்பூவில் சேர்த்து, குங்குமப்பூவை நன்கு கரையும் வரை ஊற வைக்க வேண்டும்.
இப்போது தேங்காய் பால், பால் மற்றும் குங்குமப்பூ பாலை அரிசியுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து, பாலில் அரிசி வெந்து, நீர் சுண்டும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான தேங்காய் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications











