Latest Updates
-
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும்
கேரட் சட்னி
கேரட் சாப்பிட்டு வந்தால், கண்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். பலர் கேரட்டை அப்படியே சாப்பிடுவார்கள். வேறு சிலரோ அதனை ஜூஸ் செய்து குடிப்பார்கள். ஆனால் இந்த கேரட்டை கொண்டு சட்னி செய்தும் சாப்பிடலாம் என்று தெரியுமா? ஆம், கேரட் சட்னியானது இட்லி மற்றும் தோசைக்கு அருமையாக இருக்கும்.
மேலும் காலை வேளையில் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியானதும் கூட. சரி, இப்போது கேரட் சட்னியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கேரட் - 4 (துருவியது)
சின்ன வெங்காயம் - 8
வரமிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, வரமிளகாய், புளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்களானது குளிர்ந்ததும், அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கேரட் சட்னி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











