Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஈஸியான...பிரட் உப்புமா
தற்போது அனைத்து வீடுகளிலும் விரைவில் செய்து முடிக்கக்கூடிய டிஷ்களில் ஒன்று தான் உப்புமா. இந்த உப்புமாவை காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிடலாம். அதிலும் உப்புமாவை பல வழிகளில் செய்யலாம். அதில் ஒன்று தான் ரவையை வைத்து செய்வது. இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் செய்வது தான். ஆனால் இப்போது இந்த உப்புமாவில் ரவையோடு, பிரட் மற்றும் காய்கறிகளை சேர்த்து, நன்கு கலர் புல்லாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். அந்த பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ரவை (வெள்ளை அல்லது கோதுமை) - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
பிரட் துண்டுகள் - 10 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் )
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 6
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வாணலி சூடானதும் அதில் ரவையை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைக்கவும்.
இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு, வறுக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை போட்டு, 1 நிமிடம் வதக்கி, நறுக்கிய குடை மிளகாய், கேரட் போட்டு, நன்கு வேகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வேக வைத்த பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். நன்கு வதக்கியப் பின் மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு, நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் பிரட் துண்டுகளை போட்டு, தண்ணீர் நன்கு சுண்டும் வரை, கிளற வேண்டும். தண்ணீர் சுண்டியதும், அதை இறக்கவும்.
இப்போது சுவையான பிரட் உப்புமா ரெடி!!!
பின்னர் அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும். அதிலும் இதனை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications