Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஈஸியான...பிரட் உப்புமா
தற்போது அனைத்து வீடுகளிலும் விரைவில் செய்து முடிக்கக்கூடிய டிஷ்களில் ஒன்று தான் உப்புமா. இந்த உப்புமாவை காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிடலாம். அதிலும் உப்புமாவை பல வழிகளில் செய்யலாம். அதில் ஒன்று தான் ரவையை வைத்து செய்வது. இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் செய்வது தான். ஆனால் இப்போது இந்த உப்புமாவில் ரவையோடு, பிரட் மற்றும் காய்கறிகளை சேர்த்து, நன்கு கலர் புல்லாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். அந்த பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ரவை (வெள்ளை அல்லது கோதுமை) - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
பிரட் துண்டுகள் - 10 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் )
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 6
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வாணலி சூடானதும் அதில் ரவையை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைக்கவும்.
இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு, வறுக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை போட்டு, 1 நிமிடம் வதக்கி, நறுக்கிய குடை மிளகாய், கேரட் போட்டு, நன்கு வேகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வேக வைத்த பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். நன்கு வதக்கியப் பின் மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு, நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் பிரட் துண்டுகளை போட்டு, தண்ணீர் நன்கு சுண்டும் வரை, கிளற வேண்டும். தண்ணீர் சுண்டியதும், அதை இறக்கவும்.
இப்போது சுவையான பிரட் உப்புமா ரெடி!!!
பின்னர் அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும். அதிலும் இதனை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications