Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
பாகற்காய் சட்னி
காலையில் தோசை அல்லது இட்லிக்கு தேங்காய் சட்னி செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக பாகற்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிட்டால், பாகற்காயின் கசப்பே தெரியாது.
சரி, இப்போது அந்த பாகற்காய் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த சட்னி சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1
துருவிய தேங்காய் - 2-3 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 5-6
புளி - 1 எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பாகற்காயை துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கிக் கொள் வேண்டும்.
பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பின் பாகற்காயானது நீரை வெளியேற்றியிருக்கும். அப்போது அதனை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.
பின் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வரமிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
எப்போது சட்னியின் நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறுகிறதோ, அப்போது சட்னியை இறக்கினால், பாகற்காய் சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications











