Just In
- 20 min ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Movies Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகற்காய் சட்னி
காலையில் தோசை அல்லது இட்லிக்கு தேங்காய் சட்னி செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக பாகற்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிட்டால், பாகற்காயின் கசப்பே தெரியாது.
சரி, இப்போது அந்த பாகற்காய் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த சட்னி சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய்
-
1
துருவிய
தேங்காய்
-
2-3
டேபிள்
ஸ்பூன்
மல்லி
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
வரமிளகாய்
-
5-6
புளி
-
1
எலுமிச்சை
அளவு
வெல்லம்
-
1
எலுமிச்சை
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
2-3
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1/4
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1/4
டீஸ்பூன்
கடலைப்
பருப்பு
-
1/4
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
பெருங்காயத்
தூள்
-
1
சிட்டிகை
செய்முறை:
முதலில் பாகற்காயை துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கிக் கொள் வேண்டும்.
பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பின் பாகற்காயானது நீரை வெளியேற்றியிருக்கும். அப்போது அதனை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.
பின் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வரமிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
எப்போது சட்னியின் நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறுகிறதோ, அப்போது சட்னியை இறக்கினால், பாகற்காய் சட்னி ரெடி!!!