Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பீட்ரூட் சாம்பார்
தென்னிந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் பீட்ரூட் சாம்பார் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த சாம்பார் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், மிகவும் சுவையான ருசியில் இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து அழுத்துப் போனவர்கள், இந்த பீட்ரூட் சாம்பாரை ட்ரை செய்து பார்க்கலாம்.
இது எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு சாம்பார் ரெசிபி. இப்போது அந்த பீட்ரூட் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 கப்
பீட்ரூட் - 2 (சிறியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, கரைத்தது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பீட்ரூட் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.
விசிலானது போனதும், அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கடைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்து நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
பின்பு அத்துடன் கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து ஒரு கிளறி விட்டு, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பீட்ரூட் சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
