Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
பேச்சுலர் சமையல்: வெங்காய சாம்பார்
வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்களில் தங்கி அவஸ்தைப்படுவோர் அதிகம். அதிலும் எப்போதும் ஹோட்டல் சாப்பாட்டினை சாப்பிட்டு பலரும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் வெளியூர்களில் வீடு எடுத்து தங்கியிருந்தால், சிம்பிளாக சாதம் வைத்து, வெங்காய சாம்பார் செய்து சாப்பிடலாம்.
இங்கு பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடும் படியான வெங்காய சாம்பார் எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியைப் போட்டு, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
அடுத்து, அதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, பின் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான வெங்காய சாம்பார் ரெடி!!!



Click it and Unblock the Notifications