Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. உளுந்தங்களியை செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? வீட்டில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அவற்றை அரைத்து பொடி செய்து, அந்த பொடியைக் கொண்டு உளுந்தங்களி செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்வீட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? வீட்டில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அவற்றை அரைத்து பொடி செய்து, அந்த பொடியைக் கொண்டு உளுந்தங்களி செய்து கொடுங்கள். இந்த உளுந்தங்களி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த உளுந்தங்களியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த உளுந்தங்களியை சாப்பிட, உடலில் இரத்தம் அதிகரிக்கும். இந்த களியை காலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு உளுந்தங்களி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்தங்களியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 3/4 கப்
* கருப்பட்டி - 1 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டியை கரைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, ஒரு வாணலியில் ஊற்ற வேண்டும்.
* பின்பு அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். வெல்லப்பாகு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மாவை மெதுவாக தூவி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும்.
* அப்படி கிளறும் போது, களியை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும். களி கெட்டியானதும், அதில் எண்ணெயை ஊற்றி கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அந்த களியை எண்ணெய் பயன்படுத்தி சிறு உருண்டைகளாக உருட்டினால், சத்தான உளுந்தங்களி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications








