Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
Tomato Peanut Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவு சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்பவும் ஒரே மாதிரி தான் குருமாவை செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளியும், வேர்க்கடலையும் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி வேர்க்கடலை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, இட்லி, தோசையுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி வேர்க்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வேர்க்கடலை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வேக வைப்பதற்கு...
* கனிந்த தக்காளி - 6
* வரமிளகாய் - 3
* பூண்டு - 6
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 3
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப் அல்லது 2 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
தக்காளி, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து, தக்காளியின் தோல்
சுருங்கும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளியின் தோல் சுருங்கியதும், அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து
ஒருமுறை அரைத்து, பின் அதில் வேர்க்கடலையை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு
நீரை ஊற்றி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான தக்காளி வேர்க்கடலை குருமா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











