Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம் -
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம்
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ!
Varalakshmi Vratham 2026: தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி பூஜை ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளக்கூடிய ஒரு பூஜையாகும். செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமான மகாலட்சுமி தேவியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, ஜெயலட்சுமி என 8 அஷ்டலட்சுமிகளாக பிரித்துள்ளனர். ஏனெனில் லட்சுமி தேவி 8 வகையான செல்வங்களை வாரி வழங்குபவள்.

இந்த அஷ்ட லட்சுமிகளையும் ஒரே நாளில் வழிபடும் நாள் தான் வரலட்சுமி விரதம். அந்த வகையில் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது வருகிறது, பூஜை செய்ய உகந்த நேரம் எது, விரதத்தின் முக்கியத்துவம், புராண கதை மற்றும் வழிபடும் முறை குறித்து விரிவாக இப்போது காண்போம்.
வரலட்சுமி விரதம் 2026 எப்போது?
வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் தேவி' என்று பொருள். வரங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி தேவிக்காக மேற்கொள்ளப்படும் வரலட்சுமி நோன்பானது பாம்பு பஞ்சாங்கத்தின் படி ஆகஸ்ட் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, வரலட்சுமி நோன்பானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் தங்கள் சமூகம் அல்லது உள்ளூர் கோயில் கடைப்பிடிக்கும் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலட்சுமி விரதம் 2026 பூஜைக்கான சுபமுகூர்த்த நேரம்
வரலட்சுமி பூஜையை லக்னங்களின் போது செய்யும்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதுவும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் 10 மணி வரை சிம்ம லக்னமாகும். இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜையை செய்யலாம்.
வரலட்சுமி விரதம் முக்கியத்துவம்
ஆடி/ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் செல்வம் செழிக்கவும், ஆரோக்கியத்திற்காகவும், தீர்க்க சுமங்கலியாக வாழவும் திருமணமான பெண்கள் மட்டுமின்றி, நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமென்று திருமணமாகாத பெண்களும் மேற்கொள்வார்கள். மேலும் இந்த விரதத்தை வீட்டில் உள்ள பெண்கள் மேற்கொள்ளும் போது குடும்பத்தினருக்கு அஷ்டலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வரலட்சுமி விரதத்தின் புராண வரலாறு
மகதை நாட்டில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் லட்சுமி தேவியை பக்தியுடன் மனதார வழிபாடு செய்து வந்தாள். அவளது பக்தியைக் கண்டு மகிழ்ந்த லட்சுமி தேவி ஒரு நாள் அவளது கனவில் தோன்றி கூறினாள்: "ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை அன்று என்னை கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபாடு செய். உனது குடும்பத்திற்கு அனைத்து வரங்களும் கிட்டும்."
சாருமதியும் அவ்வாறே செய்தாள். கலசத்தில் லட்சுமியை ஆவாஹனம் செய்து, பூக்களையும் பழங்களையும் படைத்து வழிபட்டாள். அன்றிலிருந்து அவள் வாழ்க்கை முழுவதும் செல்வமும் சுகமும் கிட்டியது. இந்த கதையே வரலட்சுமி விரதத்தின் ஆதாரக் கதை ஆகும்.
அன்று முதல் தென்னிந்திய பெண்கள் ஆண்டுதோறும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். திருமணமான பெண்கள் மட்டுமின்றி, திருமணமாகாத பெண்களும் நல்ல வரன் பெற இந்த விரதம் இருக்கலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
வரலட்சுமி பூஜைக்கு கலசம் தயாரிப்பது எப்படி?
வரலட்சுமி பூஜை செய்ய, விரதத்திற்கு ஒரு நாள் முன்னரே திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, ரங்கோலி மற்றும் மா கோலத்தால் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும்.
பிறகு பூஜை அறையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். அதன்பின் வீட்டில் வெள்ளி அல்லது வெண்கல கலச செம்பை எடுத்துக் கொண்டு, அதில் கலசப் பொருள்களைச் சேர்க்க வேண்டும். நீர்க்கலசமாக தயாரித்தால் அதில் தண்ணீர் சேர்த்து வாசனைத் திரவியங்களான பச்சைக் கற்பூரம், எலுமிச்சை வேர், ஜாதிக்காய், ஏலக்காய் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டும்.
அதுவே அரிசிக் கலசமாக இருந்தால் அதில் அரிசியுடன் வெற்றிலையைச் சேர்க்க வேண்டும். இப்படி கலசம் தயாரிக்கப்பட்ட பின், செம்பின் மேல் மா இலைகளை வைத்து, சுத்தம் செய்து மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதன்மேல் கலசத்திற்கு பட்டுத்துணியால் ஆன பாவாடையைக் கட்ட வேண்டும்.
மேலும் லட்சுமி தேவிக்கு பிடித்த தாமரை, மல்லிகை, செவ்வரளி பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த கலசத்தில் லட்சுமி தேவி குடிகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக கலசத்திற்கு முன் தவறாமல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, வெற்றிலையில் வைக்க வேண்டும். மேலும் கலசத்தின் அருகில் குத்து விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு ஆகும்.
வரலட்சுமி பூஜை முறை
வரலட்சுமி பூஜையின் போது முதலில் விநாயகப் பெருமானை வணங்கி, பின் மகாலட்சுமிக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி, ஆரத்தி செய்து, தெய்வத்திற்கு இனிப்புகளை படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பூஜை முடிந்த பின் பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக்கொள்வார்கள். இந்த பூஜையின் போது அப்பம், வடை, பொங்கல், கேசரி, பால் பாயாசம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் நைவேத்தியங்களாக வைக்கப்படும்.
விரதம் முடிந்து மறுநாள் சனிக்கிழமையன்று சடங்குகளை முடித்து, குளித்த பிறகு கலசத்தை அகற்றுகிறார்கள். வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மேலும் வரலட்சுமி பூஜை செய்யும் நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் மாற்றிக் கொள்ளலாம்.
வரலட்சுமி பூஜையின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம:
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம:
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம:
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம:
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம:
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம:
ஓம் அமரர்தம் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம:
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம:
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம:
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம:
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம:
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம:
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம:
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம:
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம:ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம:
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம:
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications