Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
தக்காளியும், பன்னீரையும் வெச்சு 15 நிமிடத்தில் இப்படியொரு சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Tomato Paneer Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் ஒரு டக்கரான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று ஏதாவது செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், பன்னீரும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்யுங்கள். இந்த தக்காளி பன்னீர் சைடு டிஷ் 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஏனெனில் இதற்கு அரைக்கும் போதே அனைத்து பொருட்களையும் சேர்த்துவிட வேண்டும். இதனால் இந்த டிஷ்ஷை வேகமாக செய்து விடலாம்.

உங்களுக்கு தக்காளி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 3
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 துண்டு
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், இஞ்சி,
மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின், துருவி வைத்துள்ள
பன்னீரை சேர்த்து, அத்துடன் கசூரி மெத்தி மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெயை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
தக்காளி பன்னீர் தயார்.



Click it and Unblock the Notifications











