Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
தக்காளியும், பன்னீரையும் வெச்சு 15 நிமிடத்தில் இப்படியொரு சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Tomato Paneer Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் ஒரு டக்கரான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று ஏதாவது செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், பன்னீரும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்யுங்கள். இந்த தக்காளி பன்னீர் சைடு டிஷ் 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஏனெனில் இதற்கு அரைக்கும் போதே அனைத்து பொருட்களையும் சேர்த்துவிட வேண்டும். இதனால் இந்த டிஷ்ஷை வேகமாக செய்து விடலாம்.

உங்களுக்கு தக்காளி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 3
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 துண்டு
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், இஞ்சி,
மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின், துருவி வைத்துள்ள
பன்னீரை சேர்த்து, அத்துடன் கசூரி மெத்தி மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெயை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
தக்காளி பன்னீர் தயார்.



Click it and Unblock the Notifications