Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
ரோட்டுக்கடை தக்காளி சட்னி ரெசிபி... இந்த சூப்பரான சட்னிக்கு பூண்டு, வெங்காயம் எதுவுமே தேவையில்ல...!
Tomato Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். சட்னிகளில் பல வகைகள் உள்ளது. பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சுவையான மற்றும் எளிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னி போலவே மிகவும் பிரபலமான மற்றொரு சட்னி தக்காளி சட்னிதான்.
தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து செய்யும் போதுதான் முழுமையான சுவை கிடைக்கும். ஆனால் ஹோட்டல்களில் பூண்டு, வெங்காயம் மற்றும் தேங்காய் என எதுவுமே சேர்க்காமல் சூப்பரான ஒரு சட்னி பரிமாறுவார்கள். அந்த சூப்பரான சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பழுத்த தக்காளி - 2 அளவு
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- மல்லி விதைகள் - 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- புளி - சிறிதளவு
- சமையல் எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கேற்ப
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி, தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பை வறுக்கவும். அதன்பின் கடலைப் பருப்பு, மல்லி விதைகள், பெருங்காயம் மற்றும் வர மிளகாய் முதலியவற்றை போடவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, சிறிதளவு புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- வதக்கிய கலவையை நன்கு ஆற விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இதை அப்படியே சாப்பிடாலம், இல்லையெனில் தாளித்தும் சாப்பிடலாம். சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, சட்னியுடன் சேர்த்து, நன்கு கலந்து சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
- உங்களுக்கு சட்னி கலர்புல்லாக வேண்டுமென்றால் சட்னியில் 2 காஷ்மீர் மிளகாயை வதக்கி சேர்த்து அரைக்கவும்.



Click it and Unblock the Notifications











