Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
4 ஸ்பூன் துவரம் பருப்பு இருந்தா போதும்.. கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பாரை செய்யலாம்... எப்படி-ன்னு பாருங்க
Village Style Tiffen Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசை செய்தால் சரியாக சாப்பிடுவதில்லையா? இதற்கு நீங்கள் செய்யும் ஒரே மாதிரியான சைடு டிஷ் காரணமாக இருக்கலாம். எனவே இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே சுவையில் சட்னி, சாம்பார் செய்யாமல், ஒருமுறை கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பாரை செய்யுங்கள்.
இந்த சாம்பார் செய்ய குறைவான அளவில் துவரம் பருப்பு இருந்தாலே போதுமானது. நிறைய சாம்பார் செய்யலாம். முக்கியமாக இந்த சாம்பாரை செய்தால், எல்லோரும் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர்- 4 டம்ளர்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* வரமிளகாய் - 5
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவிவிட்டு, பின் அதில் சுத்தமான
நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம் மற்றும்
சீரகத்தை போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன்
வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, வேண்டுமானால்
சிறிது நீரை ஊற்றி, துவரம் பருப்பின் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கிராமத்து
பாட்டிக்கடை டிபன்/இட்லி சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











